Monday, April 4, 2011

யார் இந்த ஜெயலலிதா?


வாக்களிக்கச் செல்லும் பொதுமக்கள் சிந்தனைக்கு!

ஒரே நாளில், ஒரே கையொப்பத்தில், 1,76,000 அரசு ஊழியர்களை, எஸ்மா, டெஸ்மா சட்டத்தின் மூலம் டிஸ்மிஸ் செய்து வீட்டுக்கு அனுப்பிய கொடூர மதியாளர் ஜெயலலிதா!
10 ஆயிரம் சாலைப் பணியாளர்களை வேலையைவிட்டு நீக்கி வீட்டுக்கு அனுப்பிய கொடுமையாளர் ஜெயலலிதா!

மக்கள் நலப் பணியாளர்கள் 13 ஆயிரம்  பேரை வேலையிலிருந்து நீக்கிய ஆட்சியாளர் ஜெயலலிதா!

விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனை தமிழ்நாட்டுக்கு சிறைபிடித்து வந்து தூக்கில் போட வேண்டும் என சட்டமன்றத்திலேயே பேசிய ஈழத்தமிழர் விரோதி ஜெயலலிதா!

போர் நடக்கின்றபோது அப்பாவிகள் கொல்லப்படுவது இயற்கைதான் என்று கூறி ஈழத்தமிழர் படுகொலைகளை நியாயப்படுத்திய தமிழினவிரோதி ஜெயலலிதா!

தஞ்சையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில், இலங்கைத் தமிழறிஞர்களை திருப்பி அனுப்பி அவமானப்படுத்திய ஆணவத்தின் மறுபெயர் ஜெயலலிதா!

பழிபாவங்களுக்கு அஞ்சாதவர்:

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை மோரில் விஷம் வைத்துக் கொன்றவர் என்று அவருடைய மனைவி ஜானகி அம்மையார் மீதே அபாண்டமாக பழிபோட்டவர் ஜெயலலிதா!

அய்.ஏ.எஸ். சந்திரலேகா  மீது ஆசிட்  ஊற்றி அவர் முகம் சிதையக் காரணமான சதியில் ஈடுபட்டவர் என்று சொல்லப்பட்டவர்தான் ஜெயலலிதா!

தன்னுடைய வளர்ப்பு மகன் சுதாகர்  மீதே வழக்குப் போட்டு, அவர் சம்பந்தம் வைத்துக் கொண்ட நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு மிகப்பெரிய மன அதிர்ச்சியை அளித்தவர் ஜெயலலிதா!

செரீனா என்ற பெண்மணியைக் கைது செய்து, கஞ்சா கேசில் சிறையில் அடைத்து ஆனந்தப்பட்டவர் ஜெயலலிதா!

எம்.ஜி.ஆரின் உதவியாளர் முத்து என்பவர் மீது கஞ்சா கேஸ் போட்டு பழிவாங்கியவர் ஜெயலலிதா!

80 வயது முதியவரான முன்னாள் ஆளுநர் சென்னாரெட்டி தன்னிடம் தவறாக நடக்க முயற்சித்தார் என்று குற்றம் சாற்றிய வஞ்சகர் ஜெயலலிதா!

தாழ்த்தப்பட்ட சமூகத்தவர் என்பதால் முன்னாள் அமைச்சர் அருணாச்சலம் அவர்களை தான் பயணம் செய்த  விமானத்தில் இருந்து இறக்கியவர் ஜெயலலிதா! ஆயிரக்கணக்கான இசுலாமிய சமூகத்தவர் மீது கொலை வெறித் தாண்டவமாடிய நரேந்திர மோடியை வீட்டுக்கு அழைத்து வந்த விருந்த வைத்த இந்துமத ஆர்வலர் ஜெயலலிதா!

மத மாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தவர்

தன்னுடைய ஆட்சியில், குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ அரிசியை ரூ.3.50 - க்கு உயர்த்தியது மட்டும் அல்லாமல், உயர்விலை அரிசியான, 7.50 மதிப்புள்ள அரிசியை வாங்கினால் தான் குறைந்த விலை அரிசி தர முடியும் என்று உத்தரவிட்டவர்தான் ஜெயலலிதா! பள்ளிகளில் ஏழைக்குழந்தைகளுக்கு போடப்படும், சத்துணவில் முட்டை போடக்கூடாது என உத்தரவிட்ட ஆட்சியாளர்தான் ஜெயலலிதா!

ஏழைப் பெண்களுக்கான திருமண உதவித் திட்டத்தை தன்னுடைய ஆட்சியில் நிறுத்தி வைத்து உத்தரவிட்டவர்தான் ஜெயலலிதா!

சிறுதாவூரில் தாழ்த்தப்பட்ட ஏழை  மக்களின்  நிலங்களை அபகரித்தவர் ஜெயலலிதா!

கொடநாடு எஸ்டேட்டில் பொதுமக்கள் போகும் வழியை அடைத்து வைத்து பொதுமக்களை அவதிக்குள்ளாக்கியவர் ஜெயலலிதா!

தமிழர்களுக்கும், தமிழ்ச்சமுதாயத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் மிகப்பெரிய வாழ்வாதார, பொருளாதார, வருவாய் ஈட்டும் திட்டமான சேது சமுத்திரத் திட்டத்தினை சோழவந்தான் சுப்பிரமணி சுவாமியுடன் சேர்ந்துகொண்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து தடுத்து நிறுத்தி, தமிழகத்துக்கே எதிரி என அடையாளம் உள்ளவர்தான் ஜெயலலிதா!

இறுதி ஏழை இருக்கிற வரையிலும் இலவசங்கள் தொடரும் என முழங்கும் முதல்வரின் கலைஞரின் முகமே உண்மை முகம்! இந்த இலவச திட்ட அறிவிப்பினை முகமூடியாக போட்டுக்கொண்டு மக்களை ஏமாற்ற வருபவர்தான் ஜெயலலிதா!

ஆடு, மாடுகள் எல்லாம் இலவசம் என்ற பெயரில் மக்களை ஆடு, மாடுகளை மேய்க்க வைத்து மீண்டும் ஒரு மனுதர்ம ஆட்சியைக் கொண்டு வரத்துடிக்கும் மனுதர்ம நாயகி ஜெயலலிதா!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தில் 1000 கோடி கையூட்டாகப் பெற்றுக் கொண்டார் என்று பத்திரிகைகளில் அடிபடுகிற பெயர் யார்?

கொடுமையின் மறு பெயராம் ஜெயலலிதாவை அரசியலிருந்து அப்புறப்படுத்துவது என்பது ஒரு வரலாற்றுக் கடமை. அந்தக் கடமையை ஆற்றிடும் வல்லமை தலைவர் கலைஞர் அவர்களுக்கு மட்டுமே உண்டு. அவர்தம் கரங்களுக்கு வலுவூட்ட ஆதரிப்போம் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியை.
- தகடூர் தமிழ்ச்செல்வி

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...