Monday, January 3, 2011

ஒப்புக் கொண்டார் நித்யானந்தா ரஞ்சிதா தொடர்பு பற்றி....!

கருநாடக காவல்துறையினர் தகவல்!பெங்களூரு, ஜன.3- நடிகை ரஞ்சிதாவுடன் இருந்த தொடர்பை சாமியார் நித் யானந்தா ஒப்புக் கொண்டுள் ளார் என்று கருநாடக காவல் துறையினர் தெரிவித்துள் ளனர்.
பெங்களூருவில் பிடாதி என்ற இடத்தில் சுவாமி நித் யானந்தா ஆசிரமம் வைத்து நடத்தி வருகிறார். சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் சாமியார் நித்தியானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் பாலியல் செயலில் ஈடுபட்ட காட்சிகள் ஒரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் பட்டன. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பாக சாமியார் நித்யானந்தாவின் பக்தர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக் கியது.
இந்த வீடியோ ஒளிபரப்பை அடுத்து சாமியார் நித்யானந்தாவை பெங்களூரு காவல்துறையினர் கைது செய்தது சிம்லாவில் தங்கி இருந்த சாமியார் நித் யானந்தாவை கைது செய்து பெங்களூரு கொண்டு வந்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். சிலநாள்களில் சிறையில் இருந்த பிணையில் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
காவல்துறையினர் விசாரணையின் போது நித்யானந்தா நடிகை ரஞ்சிதாவுடன் இருந்த தொடர்பை ஒப்புக் கொண்டார்.
பிடாதி ஆசிரமத்தில் நடிகை ரஞ்சிதா ஓராண்டுகளுக்கும் மேலாக தங்கி இருந்ததாகவும், அப்போது பலமுறை பாலியல் உறவு கொண்டதாகவும் கருநாடக ரகசிய காவல்துறையினர் கடந்த ஏப்ரல் மாதம் நடத்திய விசாரணையின் போது ஒப்புதல் வாக்குமூலத்தை நித்தியானந்தா அளித்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
இந்த ஒப்புதல் வாக்குமூலம் இன்றைக் கும் அதிகாரிகளின் கையில் இருப்பதாக தெரியவந்துள்ளது. ஆனால் ரஞ்சிதா கடந்த 30ஆம் தேதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். பெங்களூரு ராமநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திலும், மனு ஒன்றை தாக்கல் செய்தார். நித்யானந் தாவுடன் தன்னை சேர்த்து வெளியிடப் பட்ட வீடியோ காட்சிகள் உண்மையானவை அல்ல. போலியானவை. அந்த வீடியோ காட்சிகளில் இடம் பெற்றிருப்பது நித்யானந் தாவும் அல்ல. நானும் அல்ல என்று அவர் கூறினார்.

உறவை ஒப்புக்கொண்டார்

ரஞ்சிதாவின் மறுப்புக்கு மாறாக நித்யானந்தாவின் வாக்குமூலம் அமைந் துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதி இவரிடம் காவல்துறையினர் ரகசிய விசாரணை நடத்திய போது ரஞ்சிதாவுடன் தனக்கு இருந்த தொடர்பை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித் துள்ளார். இதனை காவல்துறையினர் வீடியோ மூலம் பதிவு செய்து வைத்துள்ளனர். ரஞ்சிதா மட்டுமல்லாமல் 15-க்கும் மேற் பட்ட பெண்களுடன் தனக்கு தொடர்பு இருந்ததாகவும் அவர் அந்த வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார்.
ஆனால் நடிகை ரஞ்சிதா அளித்துள்ள வாக்குமூலம் நித்யானந்தாவின் வாக்கு மூலத்திற்கு நேர் எதிர்மாறாக உள்ளது. நித்யானந்தா மீதான வழக்கை பலம் இழக்கச் செய்யவும், குழப்பத்தை ஏற்படுத் தவும், தன்னை வன்கலவி செய்ய முயன்றதாக நித்யானந்தாவின் சீடராக இருந்த லெனின் கருப்பன் மீது வேண்டு மென்றே ரஞ்சிதா பொய்யான வாக்கு மூலத்தை தருவதாக காவல்துறையினர் கருதுகிறார்கள்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் கருநாடக ரகசிய காவல்துறையினரிடம் ரஞ்சிதா அளித்த வாக்குமூலத்தில் லெனின் கருப்பன் தன்னை பாலியல் வன்முறை செய்ய முயன்றதாகவும், முறைகேடாக தன்னிடம் நடந்து கொண்டதாகவும், தன்னை மிரட்டியதாகவும் எதுவும் கூறவில்லை. ஆனால் இப்போது அதற்கு மாறாக லெனின் கருப்பன் மீது பாலியல் வன்முறை குற்றச்சாற்று மற்றும் மிரட்டல் குற்றசாற்று களை ரஞ்சிதா கூறுவதாக காவல்துறை யினர் தெரிவிக்கின்றனர்.
நித்யானந்தா, ரஞ்சிதா மற்றும் ஒரு சிலரின் வாக்கு மூலங்கள் இப்போது லெனின் கருப்பனை குற்றவாளி ஆக்கும் வகையில் இருப்பதாக காவல்துறையினர் சந்தேகிக்கிறார்கள். ரகசிய காவல்துறை யினர் விசாரணையின் போது ரஞ்சிதா வுடன் இருந்த தொடர்பை ஒப்புக் கொண்ட நித்யானந்தா, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது தனக்கும் ரஞ்சிதாவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும், தனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இந்த வழக்கு புனையப்பட்டு இருப்பதாக கூறினார். இதற்கு முன்பாக இதே கருத்தைத்தான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்துவதற்கு முன்பாக தெரிவித்தார்.

உண்மையான வீடியோதான்!

நித்யானந்தா - ரஞ்சிதா ஒன்றாக இருந்த வீடியோ காட்சிகள் உண்மை யானது தானா அல்லது போலியானதா என்பதை கண்டுபிடிக்க அய்தராபாத்தில் உள்ள விஞ்ஞான தடயவியல் பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு இந்த வீடியோ காட்சிகள் சோதித்து பார்க்கப்பட்ட போது இதில் எந்த ஒட்டு வேலையும் இல்லை என்றும், உண்மையாக எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த அறிக்கையும் காவல்துறையினர் வசம் உள்ளது. நித்யானந்தா மீதும் பாலியல் குற்றச்சாற்று இருந்தபோதும் அவரை காண வரும் முக்கிய பிரமுகர் களின் எண்ணிக்கை மட்டும் குறைய வில்லை. இன்றைக்கும் பிடாதி ஆசிரமத் திற்கு அவரைக் காண ஏராளமான முக்கிய பிரமுகர்கள் வந்து சென்ற வண்ணம்தான் உள்ளனர். குறிப்பாக பாலிவுட் நட்சத்திரங்கள், தமிழ்த் திரையுலக நட்சத்திரங்கள் நித்தியானந்தாவை வந்து பார்த்து செல் வதை மறக்கவில்லை.
கடந்த சனிக்கிழமை நித்யானந்தா தனது 34ஆம் ஆண்டு பிறந்தநாளை பிடாதி ஆசிரமத்தில் கொண்டாடினர். அப்போது ஆனந்தோத்சவ நிகழ்ச்சியும் நடத்தப் பட்டது. இதில் இந்தி நடிகை ஜூகி சாவ்லா, நடிகை மாளவிகா, ரஞ்சிதா ஆகியோரும் கலந்து கொண்டு நித்தியானந்தாவிடம் ஆசி பெற்றனர். பிறகு தனியாகவும் அவரை சந்தித்து அவரது தனிப்பட்ட பிரச்சி னைகள் குறித்தும் கலந்து பேசினர்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...