Thursday, December 30, 2010

நுழைவுத் தேர்வை எதிர்த்து தமிழ்நாடெங்கும் தி.க. ஆர்ப்பாட்டம்


சென்னை, டிச. 30- மத்திய அரசின் மருத்துவக் கவுன்சில் மருத்துவக் கல்லூரிக்கு பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்யும் வரை போராட்டம் ஓயாது என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அறிவித்தார்.
ஒடுக்கப்பட்ட மக்கள் போராடிப் பெற்ற சமூக நீதிக்கான உரிமைகளை பார்ப்பன அதிகார வர்க்கம் கொல்லைப்புறம் வழியாக அதைத் தட்டிப் பற்றிகும் சதியில் ஈடுபட்டுள்ளது.
மருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வினை நடத்தி அதன் மூலம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற சமூக நீதிக்கு விரோதமான முடிவை அகில இந்திய மருத்துவக் குழு எடுத்துள்ளது.
இந்த அபாயத்தினை நாட்டு மக்களுக்கு உணர்த்திடும் வகையில் திராவிடர் கழகம் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டத்தின் மூலம் எதிர்ப்பைத் தெரிவித்திட முரசு கொட்டியது.
நாடு முழுவதும் தி.க. ஆர்ப்பாட்டம்!
நாடு முழுக்க 29-12-2010 நேற்று மத்திய அரசின் நுழைவுத் தேர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.
சென்னையில் திராவிடர் கழகத்தின் சார்பில் நேற்று (29-12-2010) மாலை 4 மணிக்கு அரசு பொது மருத்துவ மனைக்கு எதிரில் உள்ள மெமோரியல் ஹால் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் பேசியோர்
மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மு.சென்னியப்பன் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்துப் பேசினார்.
அடுத்து மு.அ.கிரிதரன், அ. இறைவி, செ.வை.ர. சிகாமணி, கோ.வீ.ராகவன் ஆகியோர் ஆர்ப்பாட்ட ஒலி முழக்கங்களைத் தொடர்ந்து முழங்கினர். அதனைத் தோழர்கள் பின் தொடர்ந்து முழங்கினர்.
ஆர்ப்பாட்டத்தில் கழகப் பொருளாளர் கோ. சாமிதுரை கழகப் பொதுச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன், ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் நோக்கங் களைச் சுருக்கமாக விளக்கினர்.
தமிழர் தலைவர் உரை

நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் -தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆர்ப்பாட்டத்தை விளக்கி உரையாற்றினார். அவர் ஆற்றிய உரை வருமாறு:

இதுவரை மிக நீண்ட காலமாகப் போராடி ஒழித்த நுழைவுத் தேர்வை மீண்டும் மருத்துவக் கல்லூரியில் படிக்க நுழைவுத் தேர்வை நடைமுறைப்படுத்திட மத்திய அரசின் மெடிக்கல் கவுன்சில் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. மத்திய அரசும் மெடிக்கல் கவுன்சிலின் முடிவை வரவேற்பதாக சொல்லியிருக்கிறது.
எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்திலிருந்து...
தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர். நுழைவுத் தேர்வைக் கொண்டு வந்த பொழுதே, அவருடைய காலத்திலேயே தி.க., தி.மு.க., கடும் எதிர்ப்பைத் தெரிவித்து, நுழைவுத் தேர்வை அப்பொழுதே ரத்து செய்திட வைத்தது.

கலைஞர் சட்டமே இயற்றினார்!
தற்பொழுது கலைஞர் அவர்கள் அய்ந்தாவது முறையாக முதலமைச்சராக வந்த நிலையில், நுழைவுத் தேர்வை ரத்து செய்து சட்டமே இயற்றியதை நாங்கள் பாராட்டுகிறோம் வரவேற்கிறோம்.
கிராமத்துப் பிள்ளைகள் வரக்கூடாது...
கிராமத்துப் பிள்ளைகள், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பெண்கள் படித்து டாக்டர் ஆகக் கூடாது என்பதற்காகவே மத்திய அரசு மீண்டும் நுழைவுத் தேர்வைக் கொண்டு வந்திருக்கிறது.

மருத்துவக் கவுன்சிலில் இருந்த கேத்தான் தேசாய் என்ற பார்ப்பனர் - பல கோடி கொள்ளையடித்த பார்ப்பனர் இன்றைக்கு குஜராத் மாநிலத்தில் பதவியில் இருக்கிறார்.
பார்ப்பனர் மனுதர்மத்தை அமல்படுத்த...
மனுதர்மத்தை அமல்படுத்த பார்ப்பன ஆதிக்க வர்க்கம் நுழைவுத் தேர்வை மீண்டும் அமல்படுத்தப் பார்க்கிறது. அதன் மூலம் நமது பிள்ளைகளின் படிப்பைத் தடுக்கப் பார்க்கிறார்கள்.

மத்திய அரசின் கல்வி அமைச்சரோ மருத்துவக் கல்லூரி பொது நுழைவுத் தேர்வைக் கொண்டு வர உடன் படக்கூடிய சூழ்நிலையில் இருக்கிறார்.
மருத்துவக் கல்லூரிக்கு மட்டுமல்ல, எந்தக் கல்லூரிக்கும் நுழைவுத் தேர்வு என்பதைக் கொண்டு வரவே கூடாது.
சமூக நீதியைக் குழி தோண்டிப் புதைக்கக்கூடியது
இந்த நுழைவுத் தேர்வு சமூக நீதிக்கு விரோதமானது. சமூக நீதியைக் குழி தோண்டிப் புதைக்கக்கூடிய ஆபத்தான ஒன்றாகும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னையில் மட்டும் நடைபெறவில்லை. தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகிறது. புதுச்சேரியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
திரும்பப் பெறவேண்டும்
எனவே, மருத்துவக் கல்லூரிக்கு பொது நுழைவுத் தேர்வு என்று மருத்துவக் கவுன்சில் அறிவித்த அறிவிப்பைத் திரும்பப் பெறவேண்டும்.

இந்த அறிவிப்பு ரத்து செய்யப்படுகிற வரை எங்களது போராட்டம் தொடரும்.
இந்த நுழைவுத் தேர்வு எனும் பார்ப்பனர்களின் சதித் திட்டத்தை - உயர்ஜாதிக்காரர்களின் சதித் திட்டத்தை முறியடிக்கும் வரை திராவிடர் கழகம் ஓயாது. இந்த எதிர்ப்பு, கண்டனஆர்ப்பாட்டம் என்பது இது முதல் கட்டம்தான்.
போராட்டம் தொடரும்
மத்திய அரசின் மருத்துவக் கவுன்சிலும், மத்திய அரசும் இதில் பிடிவாதம் காட்டக்கூடாது. எனவே, எங்களுடைய போராட்டம் அடுத்த கட்டமாக மீண்டும் தொடரும். மக்கள் மத்தியில் இந்த செய்திகளைக் கொண்டு சென்று மக்களைத் திரட்டுவோம். இவ்வாறு தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
தமிழர் தலைவர் ஒலி முழக்கம்!
அதன்பின் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களே ஆர்ப்பாட்ட ஒலி முழக்கங்களை எழுப்பினார். அதைக் கூடியிருந்த தோழர்கள், தோழியர்கள் ஆர்ப்பரித்து முழங்கினர். நுழைவுத் தேர்வு கூடாது!
தடுப்போம், தடுப்போம்
நுழைவுத் தேர்வைத் தடுப்போம்!
எங்கள் கிராமத்துப் பிள்ளைகள்
டாக்டராக வருவதைத் தடுக்கும்
தடுப்புச் சுவரை உடைப்போம்!
தமிழகத்தில் நுழைவுத் தேர்வைத் ரத்து செய்து சட்டம் இயற்றிய
முதல்வர் கலைஞரைப் பாராட்டுகிறோம்!
நுழைவுத் தேர்வை தெளிவு படுத்தி
மத்திய அரசுக்கு எடுத்துரைத்து எழுதிய
முதல்வர் கலைஞரைப் பாராட்டுகிறோம்
ஒன்று சேர்வோம்
ஒன்றுசேர்வோம்
நுழைவுத் தேர்வை எதிர்க்க கட்சி வேறுபாடின்றி அனைவரும்
ஒன்று சேர்வோம், ஒன்று சேர்வோம்!
தகுதி,திறமை என்ற முகமூடியைக் கழற்றி எறிவோம்!
ஏமாற்றாதே!
ஏமாற்றாதே, ஏமாற்றாதே
கிராமத்து மக்களை ஏமாற்றாதே!
ஒடுக்கப்பட்ட மக்களை ஏமாற்றாதே!
இவ்வளவு ஒலி முழக்கங்களையும் தமிழர் தலைவர் எழுப்பினார். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.
முக்கிய பிரமுகர்கள்
திராவிடர் கழக தலைமை நிலையச் செயலாளர் வீ.அன்புராஜ், பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி தலைவர் கவிஞர் செ.வை.ர. சிகாமணி, திராவிடர் கழக கலைத் துறை அமைப்பாளர் இனமான நடிகர் மு.அ.கிரிதரன், கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.பார்வதி, பெரியார் புத்தக நிலைய மேலாளர் டி.கே.நடராசன், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் திருமகள்.
சமாஜ்வாடி கட்சி
சமாஜ்வாடி கட்சியின் மாநில தலைவர் இளங்கோ யாதவ், மாநில பொதுச் செயலாளர் வாசு, மாநிலப் பொருளாளர் ராஜேந்திரன், மாநில இளைஞரணி தலைவர் ஆர்.சம்பத், சென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் என். பாஸ்கரன் மற்றும் பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
பெரியார் பெருந்தொண்டர் வந்தவாசி வேல். சோமசுந்தரம், சீர்காழி ஜெகதீசன், பெரியார் நூலக வாசகர் வட்ட செயலாளர் சத்திய நாராயணன் சிங், துணைச் செயலாளர் த. சுப்பிரமணியம், பொருளா ளர் கு.மனோகரன், திராவிடர் தொழிலாளர் போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த நாகரத்தினம், இராமலிங்கம்,
தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, தோழர்கள் இரா. பிரபாகரன், மு.சண் முகப்பிரியன், மு.ந. மதியழகன், எம்.பி.பாலு, டி.ஆர். சேதுராமன், கு.பா.அறிவழகன், அரவிந்த்.ச., தேசி. கணேஷ், சௌ. சந்தோஷ்குமார், சு.கிருஷ்ணமூர்த்தி, ம.மணியரசு, செ. இராமு, சிறீதர், ச.தாஸ், மாரியப் பன், க.விசயராசா, கு.செல்வேந்திரன், கோ.வீ. ராகவன், வடசென்னை மாவட்ட தலைவர் கோ. தங்கமணி வி., அஜந்தா பி., சந்தோஷ், வீர. சுவீன், அன்புச்செல்வம், சி.செங்குட்டுவன், விருகைநாதன், கே.எம்.சிகாமணி,
வடசென்னை மாவட்ட தி.க. தலைவர் கோ. தங்கமணி, செயலாளர் தி.வே.சு.திருவள்ளுவர், துணைத் தலைவர் தி.செ.கோபால், மற்றும் தோழர்கள் வாசு, தங்க. தனலட்சுமி, பிரபாகரன், விமலா, அறிவுசெல்வன், மணிமாறன், விசாலி, சரிதா, அன்புராசா, தம்பி. பிரபாகரன், ச.மனோகரன், இந்திரா, பெரம்பூர் ஜோதி, செம்பியம் கி. இராமலிங்கம், கோபாலகிருஷ்ணன், எண்ணூர் மோகன், கவிஞர் மணி காளியப்பன், மங்களபுரம் பாஸ்கர், சரவணா காலணியகம் சரவணன், தே. ஒளி வண்ணன், மு.ஜான்சன், சு. செல்வம், மு.லோகநாதன், இரா. சார்லஸ், வ.மாதேஸ்வரன்,
கும்மிடிப்பூண்டி தி.க. மாவட்டத் தலைவர் செ. உதயகுமார், துணை செயலாளர் க.ப.சக்கரவர்த்தி, துணைத் தலைவர் ந.கசேந்திரன், தோழர்கள் பழனி பன்னீர்செல்வம், வினோத்குமார், ஏமந்த்குமார், மாநில இளைஞர் அணி அமைப்பாளர் வ. இரவி,
சென்னை மண்டல தி.க. செயலாளர் நெய்வேலி வெ. ஞானசேகரன், தாம்பரம் மாவட்ட தி.க. தலைவர் ப.முத்தையன், செயலாளர் அனகை ஆறுமுகம், அடையாறு கோ. அரங்கநாதன், நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன், மற்றும் தோழர்கள் பம்மல் கோபி, கண்ணன், விஜய்குமார்.கெ. சன் சரவணன், முருகவேல், மோகன், கோ. நாத்திகன், பரந்தாமன், பிரதாப், சுரேஷ், இர. சிவசாமி, திருஞானம், அரங்க நாதன், கலாநிதி, முத்தரசன், கண்ணன், நாகரத்தினம், கழக மகளிரணி கு. தங்கமணி, பசும்பொன், செல்வி, மணிமேகலை, இள. இந்திரா, இள. தேன் மொழி, வெற்றிச்செல்வி பூங்குன்றன், கனிமொழி, காயத்திரி, மலர்விழி, வி.வளர்மதி, வி. யாழ்ஒலி, வி. தங்கமணி, பி.அஜந்தா, விமலா, த.பங்கஜம், மோகன பிரியா, சங்கரி, வனிதா, இளமதி, வழக்கறிஞர் வீரமர்த்தினி, ஆனந்தி, மரகதமணி, துரை மீனாட்சி, திவ்யா, பா. மணியம்மை,
ஆவடி மாவட்ட தி.க. தலைவர் ம.ஆ.கந்தசாமி, செயலாளர் பா. தட்சணா மூர்த்தி, அமைப்பாளர் அ.அருண், ஆவடி நகர கழகத் தலைவர், இரா ஜேந்திரன், செயலாளர் கோ. முருகன், நகர அமைப்பாளர் இரவிச்சந் திரன், மாவட்ட இளைஞ ரணி துணைத் தலைவர் உ.கார்த்திக், ஆவடி மாவட்ட மகளிர் பாசறைஅமைப்பாளர் வனிதா, மற்றும் தோழர் கள் வேப்பம்பட்டு இரவிச் சந்திரன், பட்டாளம் பன்னீர், திருநின்றவூர் இரகுபதி, கு.சங்கரி, மோகனப்பிரியா, ஆவடி மாவட்ட மாணவரணி செயலாளர் கு. இளமதி, பூவிருந்தவல்லி, பெரியார் மாணாக்கன், மாட்சி, மணிமேகலை, பட்டா பிராம் அறிவுமணி, திரு வூர் கோரா, மதுரவாயல் நாகராஜ், அம்பத்தூர் அரவிந்தன், திவ்யபிரியா, காரல் மார்க்ஸ் மற்றும் விடுதலை மாதவன், பெரு.இளங்கோவன், உடுமலை வடிவேல், செங்கை பூபதி, புருனோ, கருணாகரன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். நிறைவாக பா. மணியம்மை நன்றி கூறினார்.
கோவை
பொது நுழைவுத் தேர்வை கண்டித்து, கோவை மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட இளைஞர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 29.12.2010 புதன் காலை 11.30 மணிக்கு, செஞ்சிலுவை சங்க அலுவலகம் முன்பு கோவை மண்டல திராவிடர் கழக இளைஞர் அணி செயலாளர் ம.சந்திரசேகர் தலைமையில், மாநகர் மாவட்ட இளைஞர் அணி தலைவர் மா.சிவதாஸ், மாநகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் மு.தமிழ் செல்வம், புறநகர் மாவட்ட மாணவரணி அமைப் பாளர் சு.ஜீவா முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகர் மாவட்ட தலைவர் சிங்கை ஆறுமுகம், மாநகர் மாவட்ட செயலாளர் அன்பரசு, புறநகர் மாவட்ட செயலாளர் பழ.அன்பரசு, புறநகர் மாவட்ட அமைப்பாளர் ச.சிற்றரசு, ஒன்றிய செயலாளர் ச.சிவக்குமார், ரங்கசாமி, புலியகுளம் ஜார்ஜ், திக.செல்வம், மு.தமிழ்செல்வம், போத்தனூர் சுகுமார், பெரியார் பெருந் தொண்டர் இ.கண்ணன், தா.சூசைராசு, ஆட்டோ சக்தி, விஜயன், ரகுநாத், வெற்றி செல்வன், கு.வெ. கி.செந்தில், வெள்ளலூர் மணி, தலைவர் பழனி சாமி, புண்ணியமூர்த்தி, தர்மலிங்கம், பொள் ளாச்சி மாவட்ட துணை செயலாளர் மாரிமுத்து, நகர தலைவர் வீரமலை, நகர செயலாளர் செழி யன், சிவானந்தம், இளை ஞர் அணி அமைப்பாளர் அனந்தசாமி, சிவக்குமார், முனியன், சதீசு, அடைக் கலம், வெள்ளலூர் ஆறுச் சாமி, மாவட்ட அமைப் பாளர் திராவிடமணி, சுரேசு, ரமேசு, மகாலிங் கம், மாவட்ட மகளிர் அணி செயலாளர் கலை செல்வி, சுயமரியாதை திருமண நிலைய அமைப் பாளர் ராஜேசுவரி, தி. கவிதா, திலகம், ஜோதி, சகுந்தலா, பிரியா, பெரி யார் பிஞ்சுகள் ரா.சி. பிர பாகரன், தா.க.கவுதமன், தா.க.யாழினி, தி.ச.யாழினி, தி.ச.கார்முகிலி, த.செ.இனியா, மதிவாணன், கு.விஜய், கு.அஜித், பெரியார்மணி, ஜெயந்த்,சக்தி பழனிசாமி, தமிழரசு, நான்சி, மற்றும் இந்நிகழ்வில் சமாஜ்வாடி கட்சியின் மாநில துணைத்தலைவர் சதீஷ், க.செல்வ ராசு, செல்வம்,ராமு ஆகியோர் கலந்து கொண் டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அனை வருக்கும் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வே.தமிழ்முரசு நன்றி கூறினார்.

நாகர்கோவில்
மருத்துவக் கல்லூரி படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வை மத்திய மருத்துவ கவுன்சில் புகுத்துவதைக் கண்டித்து குமரி மாவட்ட தி.க. இளைஞரணி சார்பில் நேற்று காலை 10 மணிக்கு (29.12.2010) நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.
குமரி மாவட்ட தி.க. இளைஞரணி செயலாளர் த.சுரேஷ் வரவேற்றுப் பேசினார். தி.க. மாவட்ட இளைஞரணி தலைவர் வழக்கறிஞர் வே.சதா தலைமை தாங்கினார். தி.க. மாவட்ட தலைவர் ப.சங்கர நாராயணன், தி.க. மாவட்ட செயலாளர் கோ.வெற்றிவேந்தன், தி.க. மாவட்ட துணை செயலாளர் சோ.பன்னீர்செல்வம், தி.க. மாவட்ட அமைப்பாளர் ஞா.பிரான்சிஸ் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.
விளிம்பு நிலை மக்கள் குரல் அமைப்பாளர் சி.மா.பிருதிவிராஜ், வழக்கறிஞர் கோ.தமிழ்ச் செல்வன், தி.க. மாவட்ட மகளிரணி தலைவர் ச.ச.மணிமேகலை, பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் உ.சிவதாணு ஆகியோர் உரையாற்றினர். சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா அமைப்பின் மாவட்ட தலைவர் அ.செய்யது அலி கருத்துரை ஆற்றினார்.
தி.க. நெல்லை மண்டல செயலாளரும், கழக பேச் சாளருமாகிய மா.பால் ராசேந்திரம் ஆர்ப்பாட் டத்தின் நோக்கங்களை விளக்கியும், நுழைவுத் தேர்வால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் கிராமப்புற மாணவர் களுக்கு ஏற்படும் பாதிப் புகள் குறித்தும், நுழைவுத் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் எனவும் சிறப்புரை ஆற்றினார்.
தி.க. மாவட்ட மகளி ரணி தலைவர் ஆ.செல்வி, தி.க. நகர செயலாளர் செ.ஆனந்தன், நகர அமைப் பாளர் ச.நல்ல பெருமாள், தி.க. குருந்தன்கோடு ஒன் றிய செயலாளர் ம.ப. நூர்தீன், தோவாளை ஒன் றிய தி.க. செயலாளர் மா. ஆறுமுகம், தி.க. நகர இ. அணி செயலாளர், மு.சேகர், தி.க. நகர துணைத் தலை வர் கவிஞர் எச்.செய்க் முகமது, தி.க. கருங்கல் கிளை செயலாளர் அ.மத் தியாஸ், தி.க. மகளிரணி தோழர் சொர்ணா மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட் டத்தின் நோக்கங்கள் குறித்து முழக்கமிட்டனர். தி.க. மாணவரணி செயலாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.
திருச்சி
நுழைவுத்தேர்வை அனுமதிக்கக் கூடாது என்ப தனை வலியுறுத்தி திருச்சி சந்திப்பு காதி கிராப்ட் அருகில் நேற்று மாலை 4.00 மணியளவில் மாவட்ட மாணவரணித் தலைவர் ப.பாலகிருஷ்ணன் தலை மையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டஇளைஞரணித் தலைவர் நேதாஜி, செயலாளர் தமிழ்மணி, இலால்குடி மாவட்ட இளைஞரணித் தலைவர் அன்புராஜா, செயலாளர் ஆசைத்தம்பி, மாவட்ட மாணவரணித் தலைவர் முரளிதரன், மாவட்ட இளைஞரணித் துணைச் செயலாளர் வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மண்டலத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், மாவட்டச் செயலாளர் மா.செந்தமிழினியன், இலால்குடி மாவட்டச் செயலாளர் ஆல்பர்ட், மாவட்ட அமைப்பாளர் இளவரி, இலால்குடி ஒன்றியத் துணைச் செயலாளர் ஆசிரியர் அமிர்தம், உடுக்கடி அட்டலிங்கம், சமாஜ்வாடி கட்சி மாநில பொதுச் செயலாளர் நீலமேகயாதவ் ஆகி யோர் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினார்கள். பின்னர் ஆர்பாட்ட நோக்க ஒலி முழக்கமிட்டனர்.
மாநகர செயலாளர் ஜெயராஜ், எஸ்.பி.செல் வம், மாநகர அமைப்பா ளர் குணசேகரன், திரு வெறும்பூர் ஒன்றியச் செயலாளர் தமிழ்ச்சுடர், திருவரங்கம் நகரத் துணைத் தலைவர் வே.முத்துக்குமா ரசாமி, அமைப்பு சாரா தொழிற் சங்கத் தலைவர் திராவிடன் கார்த்திக், சோமசரம்பேட்டை தியாகராஜன், சேவியர், ஜெயில் பேட்டை அருள், மாநகர அமைப்பாளர் விடுதலை செல்வம், உண்மை துரை ராஜ், பால்ராஜ், ஆட்டோ பழனி, ஸ்டா லின், சட்டக் கல்லூரி மாணவர் தலைவர் அருண்பாண்டியன், திலீபன், கோபிநாத், ஆனந்த்,சின்னராசு, செந்தில், மணிகண் டன், சமாஜ்வாடி கட்சி சார்பில் ஜோசப்ராஜ், ராமானுஜம், கேசவன், தண்டபாணி, இலால்குடி மாவட்ட தோழர்கள் வெங்கடாசலம், கலியபெரு மாள், செல்வராஜ், பிச்சைமணி, ஜான் லூயிஸ், இராஜகோபால், பொதுக்குழு உறுப்பினர் பொன் மலை கணபதி, பாலமுருகன் உள்ளிட்ட ஏராள மானோர் பங்கேற்றனர் மாநகர தலைவர் கணேசன் நன்றி கூறினார்.
காரைக்குடி
காரைக்குடியில் நுழைவுத்தேர்வு திணிக்கப் படுவதை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு தி .க தலைமைச் செயற்குழு உறுப்பினர் சாமி.திராவிடமணி தலைமையேற்றார். மாவட்ட தலைவர் ச.அரங்கசாமி, மண்டல செயலாளர் சாமி.சமதர்மம், மாவட்ட செயலாளர் தி.என்னா ரெஸ் பிராட்லா, தி.தொ.ச.மாநில துணைத்தலைவர் அ.கோவிந்தராஜ், பொதுக்குழு உறுப்பினர் சா.இராமன், சாக்கோட்டைஒன்றிய செயலாளர் சி.செல்வமணி, நகர அமைப்பாளர் செஞ்சை பழனிவேலு, தேவகோட்டை நகர தலைவர் தி.கலைமணி, பெரியார் வீர விளையாட்டு கழக செயலாளர் ஒரத்தநாடு இராமகிருட்டினன், மாவட்ட ப.க.தலைவர் ந.ஜெகதீசன், விடுதலை வாசகர் வட்ட தலைவர் சிவ.கிருட்டினன், செயலா ளர் ப.சுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம்
29.12.2010 அன்று மாலை 4 மணிக்கு காஞ்சியில், காஞ்சி மாவட்ட தி.க. தலைவர் டிஏஜி அசோகன் ஆர்ப்பாட்டத்தை விளக்கி தொடக்க உரையாற் றினார். செங்கை கழக மாவட்ட செயலாளர் துரை. முத்து அனைவரையும் வரவேற்றார். ஆர்ப் பாட்டத்தை விளக்கி செங்கை மாவட்ட தி.க. தலைவர் அ.கோ. கோபால்சாமி, மாவட்ட மாணவரணி செயலாளர் மு.அருண்குமார், செங்கை சுந்தரம், பழனி சு.அழகிரிசாமி, செங்கை மாவட்ட இளைஞரணி தலைவர் படாளம் கருணாநிதி, காஞ்சி மாவட்ட தி.க. செயலாளர் செ.ரா.முகிலன், தலைமை கழகப் பேச்சாளர் காஞ்சி பா.கதிரவன் ஆகியோரின் உரைக்குப்பின் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தமிழ் சாக்ரட்டீஸ் தலைமை உரையாற்றினார். நுழைவுத் தேர்வு என்ற நரித் தனத்தை பார்ப்பனர்கள் திணிப்பதால் தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி உரிமை பறிக்கப்படும் அபாயத்தையும், கழகத்தின் போராட் டத்தின் நியாயத்தையும் விளக்கி உரையாற்றினர். காஞ்சி மண்டல தி.க. தலைவர் பு.எல்லப்பன் நன்றி கூறினார்.
மதுராந்தகம் ஏழுமலை, சுந்தர பிரபாகரன், கி.இளையவேள், திருக்கழுக்குன்றம் சண்முகம், ஓட்டுநர் விஜி, மாணவரணித் தோழர்கள் வி.சுரேஷ், சி.ஜானகிராமன், எ.பிரபாகரன், பாரதிதாசன், வெற்றித்தமிழன், தியாகராஜன், மைக்செட் சேகர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...