Thursday, December 30, 2010

விபீடணர்களின் கனவு பலிக்காது

விடுதலையில் தினமணி கூட்டத் திற்கு மின்சாரம் பாய்ச்சியது போல் 25.12.2010 வெளிவந்த மின்சாரம் அவர் கள் எழுதிய தினமணி அய்யர் வாளும் - வால்களும் கட்டுரை மிக வும் அற்புதமாக இருந்தது. தினமணி கூட்டத்திற்கும், இனத் துரோகிகளுக் கும் மின்சாரம் பாய்ச்சியது போல் இருந்தது. திராவிடர் கழகத் தோழர் கள் அனைவரும் படித்து உள்வாங்கிக் கொள்ள வேண்டிய அத்துணை குறிப்புகள் - பட்டியல்கள்! தந்தை பெரியாருக்குப்பின் பொதுவாழ் விலும்,  தனிவாழ்விலும் ஒழுக்கம் + நேர்மை= கி.வீரமணி என்ற இலக் கணத்தோடு வாழ்ந்து, இயக்கத்தைக் கட்டிக் காத்து இமயம் போல் உயர்ந்து நிற்பதை விபீடணர்களால் பொறுக்க முடியவில்லை -  தினமணி, தின மலர், சோ, சு.சாமி கல்கி, ஆனந்த விகடன் பார்ப்பன பனியா கூட்டங் களுக்கு. பிணந்திண்ணிக் கழுகுகள் போல் அலைகின்றனர். ஆவேசப்படு கின்றனர், சமீபகாலமாக விடுதலை யில் கட்டுரைகள் தலையங்கங்கள், ஆசிரியரின் பேச்சுகள் ஆரியர் - திராவிடர் போராட்டம் மீண்டும் என்பது குறித்து திராவிடர்கள் இனஉணர்வு கொண்டு எழுச்சி பெறும் விதத்தில் உள்ளது.
தமிழ்நாடு தந்தை பெரியாரின் பூமி. இங்கு ஆரிய மனுதர்மப் பார்ப்பனர் கள், விபீடணர்களின் கனவு பலிக் காது - ஜம்பம் சாயாது - வீரர்கள் பெரியாரின் தீரர்கள் வாழும் திராவிட நாட்டை வெல்பவர் கிடையாது.
வாழ்க பெரியார்! வளர்க பகுத் தறிவு!
- தி.க.பாலு,
திண்டுக்கல்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...