Monday, December 27, 2010

பா.ஜ.க.வுக்கு காங்கிரஸ் 9 கேள்விகள்


பெங்களூரு, டிச.27- மத்தியில் பா.ஜ.க. ஆட்சியிலிருந்த போது அதன் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த எச்.என்.அனந்தகுமாருக்கு நீரா ராடியாவுடனான தொடர்புகள் குறித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கேள்விக் கணை தொடுக்கப்பட்டுள்ளது.

2-ஜி அலைக்கற்றை ஊழலில் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் அரசியல் தரகர் நீரா ராடியாவுக்கும், பா.ஜ.க. ஆட்சியில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த எச்.என். அனந்தகுமாருக்குமிடையிலான தொடர்பு கள் குறித்த செய்திகள் வெளியாயின. கருநாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பி.கே.சந்திரசேகர் இவர்களது தொடர்பு குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.

பெங்களூருவில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகை யில் அனந்த் குமார் மீது குற்றம் சாற்றப்பட்டால் பா.ஜ.க.யின் தலைவர்களில் ஒருவரான அருண் ஜேட்லி ஏன் பதில் அளிக்கிறார்? இது வினோதமாக உள்ளது என்றார். மேலும் அவர், அனந்த் குமார் பதிலளிக்கவேண்டிய கேள்விகள் என ஒரு பட்டியலை அளித்தால், அதில் உங்களுக்கு நீரா ராடியாவைத் தெரியுமா? எப்போது அவரை முதலில் சந்தித்தீர்கள்? உங்களுக்கும் நீரா ராடியாவுக்குமான தொடர்பு எத்தகையது?

ராடியா ஒரு விமான நிறுவனத்தைத் துவக்கப் போகிறார் என்பது உங்களுக்குத் தெரிந்திருந்ததா? அரசு  சம்பந்தமான தகவல்களை ரகசியமாக ராடியாவுக்கு வழங்கினீர்களா? ராடியாவை ரத்தன் டாடாவுக்கு அறிமுகம் செய்து வைத்தீர்களா? ராடியாவை எல்.கே.அத்வானி, வாஜ்பேயி, நிதின் கட்காரி, வாஜ்பேயியின் வளர்ப்பு மகன் ரஞ்சன் பட்டாச்சார்யா ஆகியோருக்கு அறிமுகம் செய்து வைத்தீர்களா?

நீங்கள் நகர் வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த போது ராடியாவுடன் தொடர்புடைய ஒரு அறக்கட்டளைக்கு நிலம் ஒதுக்கினீர்களா? நீங்கள் தனியாகவோ அல்லது ராடியாவுடனோ ராவ் தீரஜ் சிங்கைச் சந்தித்தது உண்டா?

இந்தக் கேள்விகளுக்கு பதிலளித்து, அனந்தகுமார் தாம் தூய்மையானவர் என்று நிரூபிக்க வேண்டும் என்று பி.கே.சந்திரசேகர் கூறியுள்ளார். அனந்தகுமார் பெங்களூரு வின் தென்பகுதி நாடாளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...