Wednesday, May 19, 2010

டில்லி பெரியார் மய்யம் ஒரு பார்வை!


டில்லி பெரியார் மய்யம் ஒரு பார்வை!
டில்லி, மே 2_ டில்லி ஜெசோலாவில் கட்டப்பட்டுள்ள பெரியார் மய்யம் தரைதளம் மற்றும் நான்கு மேல் தளங்களைக் கொண்டுள்ளது. ரூபாய் 10 கோடி செலவில் 63,400 சதுர அடி கட்டடம், ஒரு ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டுள்ளது.
இந்த இடம் டில்லி பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தினரால் அளிக்கப்பட்டு, கட்டடப் பணிகள் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த கட்டடம் பசுமைக் கட்டடம் 50 சதவிகித தரை தளத்திற்காக வெட்டி எடுக்கப்பட்ட 50 சதவிகித மண் இந்தக் கட்டடம் கட்டுவதற்கான கற்கள் செய்ய பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அவ்வளவு மண்ணையும் வெளியே அனுப்பும் செலவு மிச்சம். மேலும் செங்கற்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் எரிசக்தி கிட்டத்தட்ட 200 னீஷ் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. காடுகள் அழிக்கப்பட்டு எரிபொருளாக பயன்படுத்தப்படும் சுமார் 6 லட்சம் டன் மரங்கள் சேமிக்கப்பட்டுள்ளன. இது மட்டுமல்லாமல் இக்கட்டடத்தில் புத்தாக்க எரிசக்திக் கலன்கள், லிணிஞி பல்புகள், சூரிய கொதிகலன்கள் மூலம் பெறும் சக்தி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக ஒரு வருடத்தில் 25000 கிலோ வாட் மின்சார சக்தி இதன்மூலம் பெறப்படுகிறது.
தற்போது இம்மய்யத்தில் அய்.ஏ.எஸ் பயிற்சி தரப்படுகிறது. மற்றும் SAP (india), CIDC, CRD போன்ற வை மூலம் உயர்திறன் கல்வி பயிற்சியும் தொழிற்பயிற்சி கல்வியும் தொடங்கப்படுகிறது. மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து பெரியார் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட வாய்ப்பாக உள்ளது.
மேலும் AICTE டில்லி அரசு, குருகோவிந்த் சிங் இந்திரபிரஸ்தா பல்கலைக் கழகங்களுடன் சேர்ந்து விஙிகி மற்றும் விசிகி போன்ற மேலாண்மைப் படிப்புகள் படிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் வட இந்திய ஆலோசனை மய்யமாக விளங்குகிறது.
இந்த பெரியார் மய்யம் பெரியாருடைய சிந்-தனைகளை உலக அளவில் எடுத்துச்செல்ல இந்திய தலைநகரில் ஒரு முக்கிய மய்யமாக செயல்பட உள்ளது. மேலும் கூட்டங்கள், நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தும் மய்யமாகவும் இருக்கும்.
இதை எல்லாம் விட இந்த நூற்றாண்டில் தந்தை பெரியார் ஆரம்பித்து வைத்து, வெற்றி பெற்ற சமூக புரட்சிகளை உலகமெங்கும் எடுத்துச்-செல்லும் நோக்கத்துடன் செயல்படும்.
இந்த பெரியார் மய்யத்தினை மிகச்சிறந்த அளவில் உருவாக்க உதவிய திராவிடர் கழகத்தினரின் உழைப்பு, தமிழர்கள் கொடுத்த நன்கொடை, அனைத்திற்கும் மேலாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உறுதுணையாக இருக்கும் மாண்புமிகு முதல்வர் கலைஞர் அவர்களுக்கும், தமிழக அரசுக்கும், டில்லி மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும், அனைவருக்கும் திராவிடர் கழகம் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளது.
மேற்கண்ட அனைத்து செயல்களுக்கும் மிகப்பெரிய வடிவமைப்பாளராக செயல்பட்ட திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்களை காலச்சரித்திரத்தில் மறக்க இயலாது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...