Friday, January 1, 2010

இலங்கை அதிபர் தேர்தலில் யாரை ஆதரிப்பது?


இலங்கை அதிபர் தேர்தலில் யாரை ஆதரிப்பது?
இரண்டு தீமைகளில் தவிர்க்க முடியாத தீமை பொன்சேகா!
தேர்தலில் ராஜபக்சேவைத் தோற்கடிப்பதே முக்கியம்
தமிழர் தலைவர் அறிக்கை

இலங்கையில் நடை பெற உள்ள அதிபர் தேர் தலில் ராஜபக்சேவைத் தோற்கடிக்க பொன் சேகாவை ஆதரிப்பது தவிர்க்க முடி யாத தீமையாகும் என் றாலும் வேறு வழியில்லை என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிக் கையில் குறிப்பிட்டுள்ளார்.
அறிக்கை வருமாறு:
இலங்கையில் இன்னும் சில வாரங்களில் குடி-அரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதில் தற்போது அதிப-ராக உள்ள ராஜபக்சேவும், அவரிடத்தில் இராணுவ தளபதியாக இருந்து, பதவி விலகி போட்டியிடும் சரத் பொன்சேகாவும் தேர்தலில் முக்கிய வேட்பாளர்களா-கக் களம் இறங்கியுள்ள-னர்.
ஈழத் தமிழர்களின் வாக்குகள் பெரும் அள-வுக்கு அதில் வெற்றி பெற-விருக்கும் வேட்பாளரைத் தீர்மானிக்கும் சக்தி வாய்ந்ததாக உள்ளன. இந்த நிலையில், ஈழத் தமிழர்கள் யாருக்கு வாக்-களிப்பது என்பதை மிக-வும் ஆழமாகச் சிந்தித்து முடிவு எடுக்கவேண்டிய தருணம் இது.
இக்கேள்வியை, சிங்-கப்பூர் தொலைக்காட்சியி-னர் அங்கே தங்கி இருந்த என்னிடம் ஒரு பேட்டி-யின்மூலம் சென்ற ஒரு மாதத்திற்குமுன் எடுத்து, டிசம்பர் 8 ஆம் தேதி ஒளிபரப்பினார்கள்.
அப்போது கேட்கப்-பட்ட சிங்கப்பூர் தொலைக்-காட்சி பேட்டியாளரின் கேள்விகளுக்கு நான் அளித்த பதில்களை ஈழத் தமிழர்களின் வாழ்வுரி-மைக்குச் சோதனையான இந்த காலகட்டத்தில் முன்வைப்பது மிகவும் அவசியமாகிறது.
உணர்ச்சி வாய்ந்த இந்தப் பிரச்சினைக்கு ஈழத் தமிழர்கள் தீர்வு காணுவது அவ்வளவு எளிதல்ல. காரணம், இந்த இனம் சந்தித்துள்ள, சந்-தித்துவரும் இழப்புகளும், அனுபவித்துவரும் கொடு-மைகளும் சொல்லொணா-தவை ஆகும்!
இதற்கு எப்படி எப்-போது விடிவு ஏற்படுமோ என்று மனிதநேயம் உள்ள அனைவரும் கவ-லையோடு சிந்திக்கின்ற-னர்.
உணர்ச்சி அடிப்படையில் அல்ல
ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த இருவர் இத்தேர்தலில் வேட்பா-ளர்-களாகப் போட்டியிடும் நிலை-யில், யாருக்கு வாக்-களிப்பது என்ற கேள்-விக்கு வெறும் உணர்ச்சி அடிப்படையில் பதில் அளிக்க முன்வந்தால், எரிகிற கொள்ளிகளில் எந்தக் கொள்ளியை நல்ல கொள்ளி என்று கருது-வது? எனவே, இத்தேர்த-லில் இந்த இருவருக்குமே வாக்களிக்காமல் தேர்தலை தமிழர்கள் புறக்கணிப்பதே சரியானது என்று கூறக்-கூடும்.
ஆனால், அதைவிட, நமது ஈழத் தமிழர்கள் வெறும் உணர்ச்சிபூர்வ-மாக இப்பிரச்சினையை அணு-காது, அறிவுபூர்வமாக அணுகவேண்டும் என்று நாம் சிங்கப்பூர் தொலைக்-காட்சி பேட்டியில் கூறி-னோம். அதனை முன்-வைப்பது இக்கால கட்-டத்தில் மிகவும் முக்கிய-மா-னது; தேவையானதும்கூட.
தமிழர்கள் தேர்தலை, சென்ற தேர்தலில் புறக்-கணித்த காரணத்தால்தான் அதிபராக இராஜபக்சே வரும் வாய்ப்பே ஏற்பட்-டது.
அவ்வாட்சி செய்த அக்கிரமங்களுக்கு இனப் படுகொலைகளுக்கு இட்-லரின் செயல்களால் இரண்டாம் உலகப் போரின்போது ஏற்பட்டதை-விட மிகவும் கொடுமை-யானது என்பது உலக நாடுகள் பலவற்றிற்கும் கூடத் தெரியும்.
சென்றமுறை, தேர்-தலைப் புறக்கணிக்காமல், இந்த இராஜபக்சேவை பதவிக்கு வரவிடாமல் தடுத்திருந்தால் இவ்வளவு மோசமான நிலை ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்டி-ருக்க வாய்ப்பு வந்திருக்-காது.
தவறான முடிவு, மிகப்-பெரும் இழப்புகளுக்கும், சோகத்திற்கும் அவர்களை ஆளாக்கக் காரணமாக அமைந்தது.
அதே தவறை மீண்-டும் ஈழத் தமிழர்கள் செய்துவிடக் கூடாது.
நேற்று விழுந்த அதே இடத்தில் இன்றும் விழுந்து-விடக் கூடாது ஈழத் தமிழர்கள்.
யார் வரக்கூடாது
என்பதே முக்கியம்
இத்தேர்தலில் அவர்-களின் அணுகுமுறை எப்படி இருக்கவேண்டும் என்றால், யார் வர வேண்டும் என்பதைவிட யார் வரக்கூடாது - யார் வெற்றி பெறக்கூடாது என்பதே முக்கியமாக இருக்கவேண்டும்.
அதற்குரிய முக்கிய காரணங்கள்:
1. இராஜபக்சே மீண்-டும் வெற்றி பெற்றால் அவரது ஆட்சி செய்த அத்-தனை இனப்படு-கொலை-கள், உரிமை மறுப்புகள், முள்வேலி சோகங்கள் உலகத்தார் கண்முன் ஜனநாயக முத்-திரையுடன் நியாயப்படுத்-தப்படும். வரலாற்றின் இரத்தக் கறை மீண்டும் முக்கியமான-தொரு இடத்-தில் இருக்-கவே செய்யும்.
2. தமிழர்களின் வாக்-குரிமை, தேர்தல் வெற்-றியை நிர்ணயிக்கக் கூடி-யதாக உள்ளது _ அது சிறுபான்மையாக இருந்த-போதிலும்கூட.
இலங்கையைப் பொறுத்த-வரை, தமிழர்கள் யாரும் அதிபராக வரும் வாய்ப்பு _ வாக்கு பலம் அடிப்படையில் கிடை-யாது. இப்போது அவர்கள் இரண்டு தீமைகளில், எது தவிர்க்க முடியாத குறைந்த தீமை ((to Choose the lesser evil) என்பதைத்-தான் தேர்ந்தெடுக்க-வேண்டிய கட்டாயம் இருக்கிறது! இருவரில், யாரையுமே ஆதரிக்க-மாட்டோம் என்றால், அது அங்குள்ள ஈழத் தமிழர்-களின் பாதுகாப்புக்கு எதிராக அமைந்துவிடும் ஆபத்து உண்டு.
(3) பொன்சேகாவும் தளபதியாக இருந்து தமிழர்களுக்குக் கொடுமை செய்தவர்தானே _ இவரை எப்படி ஆதரிக்க முடியும் என்ற கேள்வியில் நியா-யம் உண்டு என்றாலும், அவர் ஒரு வேலைக்காரர்_ அதிபர் இராஜபக்சேவுக்கு. முடிவு எடுத்த இடத்தில் இருந்தவர் அல்லர்; அவர் தன் செயலை நியாயப்-படுத்-தாது, ஓரளவு மனந்திறந்து தன் செயலுக்கு வருத்தம் தெரிவிக்கும் நிலை ஒரு திருப்பமாகும். அதை தமி-ழர்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக அவர் நிறுத்தப்பட்டிருக்-கிறார்; அவர் தமிழர்களின் வாக்குகளைக் கேட்க, அவர்களின் முக்கிய கோரிக்கைகளை ஏற்கத் தயாராக உள்ளார் என்பது நேற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவ-ருடன் பேசி அதில் பல அம்-சங்கள் ஏற்க இசைவு தெரிவித்துள்ளார்! அந்த நிபந்தனைகளோடு அவ-ருக்கு ஆதரவு தரும் முடிவுதான் சரியானது, வரவேற்கவேண்டிய முடி-வாகும். 
(2 ஆம் பக்கத்தில் அச்செய்தி விரிவாக வெளியிடப்பட்டுள்ளது).
பொன்சேகாவை ஆதரிப்பதே புத்திசாலித்தனம்
பொன்சேகா ஒரு இராணுவப் பணியாள-ராகத்தான் செயல்பட்டார்; அவர் கீழ்ப்படிய மறுத்தி-ருந்தால்முடிவில் என்ன மாற்றம் ஏற்பட்டிருக்கும்? அவர் சிறையில் இருந்தி-ருப்பார், அல்லது காணாது போயிருப்பார்; நிலைமை மாறியிருக்காது. எனவே, அதற்குக் காரணம் இராஜ-பக்சே தோற்கடிக்கப்படு-வதே, சரியான மக்கள் தீர்ப்பாக அமையவேண்-டும். இதற்கு தமிழர்களின் பங்களிப்பு இருப்பதே முக்கியம்; காலத்தின் கட்-டாயம். சில நேரங்களில் கசப்-பான முடிவுகள் தவிர்க்கப்பட முடியாத-வைகள்தாம் என்றாலும், வேறு வழியில்லை என்-னும்போது, அதனை மேற்கொள்வதே, தமிழர்-களின் வருங்காலத்திற்கு நல்லது ஆகும்.
எந்தத் தடியை எடுத்து அடித்து பாம்பை வீழ்த்தி-னோம் என்பது முக்கிய-மல்ல; சீறிய பாம்பை அது மீண்டும் படம் எடுத்துக் கடிக்காமல், அதனை வீழ்த்-தினோம் என்பதே அறிவுப்பூர்வச் சிந்தனை.
தமிழ்த் தேசிய கூட்ட-மைப்பின் முடிவு மனித உரிமை பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் மிக-வும் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு ஆகும்.
தலைவர்,
திராவிடர் கழகம்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...