Tuesday, November 20, 2007

பா.ஜ.க., ஆசையில் விழுந்த மண்!

சாலமன் கிரண்டி திங்கள்கிழமை பிறந்தான் (Born on Monday) ஞாயிறு அன்று மரித்தான் என்று கூறும் ஆங்கிலக் கவிதை பலருக்கும் நினைவிருக்கலாம். அதனை மறந்து போனவர்கள், அல்லது இதுவரை அறியாமல் இருந்தவர்கள் கருநாடக மாநிலத்தில் பாரதீய ஜனதா கட்சி - ஆட்சி அமைத்த ஒரு வார காலத்தில் மரணித்ததன்மூலம் தெரிந்துகொள்ளலாம்.சோ ராமசாமி கல்கி போன்ற பார்ப்பன அமைப்பு களே குமட்டிக் கொண்ட அளவுக்கு பா.ஜ.க.,வின் பதவி வெறி அனைத்து நியாய தர்மங்களையும் தூக்கி எறியச் செய்துவிட்டது.மற்ற மற்ற அரசியல் கட்சிகளைப் போன்றதல்ல பா.ஜ.க.; அதற்கென்று அறநெறிக் கோட்பாடுகள் அநேகம் உண்டு என்று வானக் கூரையேறி முழக்கம் போடுவதில் குறைச்ச லில்லை. ஆனால், நடப்புகள் என்னவோ அதற்கு நேர் எதிர்மறைதான்.மதச்சார்பற்ற ஜனதா தளம் தொடக்கத்திலேயே தன் ஆதரவை அளிப்பதில் கோணங்கி வித்தைகளை எல்லாம் காட்டியது. அப்பொழுதே மரியாதையாக ஆட்சியும் வேண் டாம் - மண்ணாங்கட்டியும் வேண்டாம் என்று சொல்லியி ருந்தால், கொஞ்சம் மரியாதையாவது மிஞ்சியிருந்திருக்கும். இதில் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கேவ லத்தின் எல்லைக்கே சென்றுவிட்டது என்பது இன்னொரு சங்கதி.மதச்சார்பற்ற ஜனதா தளம் என்ற மகுடத்தைத் தரித்துக் கொண்டு, பாரதீய ஜனதாவின் தயவில் ஆட்சியை நடத்தியது. தொடக்கத்தில் பா.ஜ.க.,வுக்கு ஆதரவு இல்லை என்று தெரிவித்துவிட்டு, அதன்பின்னர் ஆதரவு என்றும், நேசக் கரத்தையும் நீட்டி துணை முதலமைச்சர் என்ற பதவியையும் பெற்றுக்கொண்டு, சட்டப்பேரவையில் பெரும் பான்மையை நிரூபிக்கும் தருணத்தில் காலை வாரிவிட்டது! பா.ஜ.க.,வின் தகுதிக்கு சரியான கூட்டாளிதான் என்பதை இதன்மூலம் தனக்குத்தானே அறிவித்துக் கொண்டுவிட்டது மதச் சார்பற்ற ஜனதா தளம்.பா.ஜ.க., மற்றும் மதச் சார்பற்ற ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகளும் ஒன்றுக்கொன்று மோசமாக நடந்துகொண்டாலும் எப்படியோ நாட்டுக்கு நல்லது நடந்துவிட்டது; மதவெறி ஆட்சியின் கீழ் அவலப்படவேண்டிய ஆபத்திலிருந்து கருநாடக மாநிலம் தப்பிப் பிழைத்துக் கொண்டுவிட்டது - அந்த அளவுக்கு அம்மாநில மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடலாம்.தென்மாநிலங்களில் கருநாடகத்தில் முதன்முதலாக ஆட்சியைப் பிடித்துவிட்டது பாரதீய ஜனதா தளம் என்ற மகிழ்ச்சியில் வாணவேடிக்கை நடத்தினார்கள். தமிழ்நாட்டு பா.ஜ.க.,வினர் இனிப்புகளை வழங்கி தீபாவளியும் கொண்டாடினார்கள். இப்பொழுது துக்க வீடாகக் களை யிழந்து காணப்படுகிறது.மதச்சார்பற்ற ஜனதா தளம் நம்பிக்கை மோசடி செய்துவிட்டது என்றெல்லாம் குற்றப் பத்திரிகை படிக்கலாம் பா.ஜ.க. ஆனால், அப்படி சொல்ல அதற்கு அடிப்படை அருகதை உண்டா என்பதுதான் முக்கியமான வினாவாகும்.ஜனசங்கத்தைக் கலைத்துவிட்டு ஜனதாவுடன் அய்க்கிய மான நிலையிலும்கூட, ஆர்.எஸ்.எஸில் உறுப்பினர் என்கிற இரட்டை நிலையை எடுத்தவர்கள்தானே இவர்கள்! அதன் காரணமாகவே தானே ஜனதா என்ற மதச்சார்பற்ற அமைப்பு நொறுங்கிப் போனது.நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதியை மீறி கரசேவை என்ற பெயரில் பாபர் மசூதியை ஒரு பட்டப்பகலில் இடித்து தரைமட்டமாக்கிய வாக்குச் (அ)சுத்தக்காரக் கூட்டம்தானே அது!மண்டல் குழுப் பரிந்துரைப்படி பிற்படுத்தப்பட்ட மக்க ளுக்கு வேலை வாய்ப்பில் 27 சதவிகித இட ஒதுக்கீட்டினை சமூகநீதிக் காவலர் மாண்புமிகு வி.பி. சிங் அவர்கள் அமல்படுத்திய காரணத்தால்தானே, வெளியிலிருந்து அளித்து வந்த ஆதரவை பா.ஜ.க., விலக்கிக் கொண்டு, ஒரு நல்லாட்சியைக் கவிழ்த்த மாபாதகத்தைச் செய்தது.இந்த நிலையில், இன்னொரு கட்சியை நோக்கி விரலை நீட்டிக் குற்றம் சுமத்தும் யோக்கியதை பா.ஜ.க.,வுக்கு கிடையாது - கிடையவே கிடையாது என்பதைப் பொதுமக்கள் அறிவார்களாக!

நன்றி: விடுதலை தலையங்கம் 20.11.2007

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...