Wednesday, June 24, 2015

வடலூர் திருக்குறள் மாநாட்டில் விழி பிதுங்கிய தினமணி வைத்தியநாதய்யர்!

வடலூர் திருக்குறள் மாநாட்டில் விழி பிதுங்கிய தினமணி வைத்தியநாதய்யர்!


வடலூரில் நடைபெற்ற திருக்குறள் தேசிய நூல் மாநாட்டில் மீண்டும் மீண்டும் ஒலித்த தந்தை பெரியாரின் கருத்துகளால் கருவாட்டை பறிகொடுத்த பாப்பாத்தி போல் ஆனார் அந்த மாநாட்டின் சிறப்புப் பேச்சாளர், தினமணி ஆசிரியர் வைத்தியநாதன்! இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே போன வைத்தியநாதன், புலால் உண்பவர்களுக்கு திருக்குறள் பற்றி பேச தகுதி இருக்கிறதா? என்று பேசி மாநாட்டுப் பார்வை யாளர்களின் கடும் விமர்சனத்துக்கும் ஆளானார்.

தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் மற்றும் தென்றல் சமூகநல அறக்கட்டளை இணைந்து வடலூரில் ஜூன் 21ஆம் தேதி மாலை திருக்குறள் தேசிய நூல் மாநாடு நடத்தினர். இந்த மாநாட்டு சிறப்பு அழைப்பாளராக வைத்தியநாதன் அழைக்கப்பட்டிருந்தார்.

இந்த மாநாட்டு மேடையில் பேசிய பேச்சாளர்களில் சிலர், திருக்குறளை பரப்பியதில் திராவிடர் இயக்கம் மற்றும் பெரியாரின் பெரும்பங்கினைப் பற்றியும் ராமாயணம் மகாபாரதம், கீதை ஆகியவற்றை படிப்பதைவிட திருக்குறளை படிப்பதே சிறந்தது எனவும் பெரியாரின் கருத்துகளை மேற்கோள்காட்டிப் பேசினர்.

பேராசிரியர் மோகனராசு

குறிப்பாக இந்த மாநாட்டுக்குத் தலைமை ஏற்றிருந்த, கு.மோகனராசு (ஆசிரியர் -வாழும் வள்ளுவம்), அவர் கள் கீதை எவ்வளவு மோச மான வர்ணாசிரமக் கருத்து களை உடையது ஆனால் திருக்குறள் அதற்கு நேரெ திராக சமத்துவத்தை பேசக் கூடியது என்று அடுக்கடுக் காக கருத்துகளை முன் வைத்தார்.

மோகனராசு பேசியதன் சுருக்கம் வருமாறு: கீதையை தேசிய நூலாக்க வேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால், உண்மையில் திருக்குறளுக்குத் தான் தேசிய நூலுக்கான முழுத்தகுதியும் உண்டு. இந்தியாவின் அரசியல் சட்டமானது மக்களுக்கான சமத்துவம், சமவாய்ப்பு பற்றி சொல்கிறது. ஆனால், மக்களை நான்கு வர்ணமாகப் பிரித்து ஜாதிக்கு ஒரு தொழிலை பிரித்துக்கொடுக்கிறது கீதை.

இதில் சூத்திரன் அடிமை வேலை செய்யவேண்டும் என்றிருக்கிறது. பேதத்தை வலியுறுத்துகிற ஒரு நூல் எப்படி தேசிய நூலாக முடியும்? ஆனால், திருக்குறளோ பிறப் பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிறது. பார்ப்பனர்கள் உழவுத் தொழில் செய்யக்கூடாது என்கிறது வர்ணாசிரமம். ஆனால், உழவுத் தொழிலின் முக்கியத்துவத்தையும் உழவர்களின் சிறப்பையும் பற்றி சொல்கிறது திருக்குறள்.

இவ்வாறு தொடர்ச்சியாக, பல திருக்குறள்களை மேற் கோள்காட்டி திருக்குறளின் சிறப்பையும், கீதையின் கேடு பயக்கும் கருத்துகளையும் மாற்றி மாற்றி சொல்லிக்கொண்டே போனார் மோகனராசு அவர்கள். அவரின் உரையில், அரங்கமே கைத்தட்டலில் அதிர்ந்து கொண்டிருந்தது.

ஆனால், வைத்தியநாதனுக்கு மட்டும் நெரிக்கட்டத் தொடங்கியது. நாற்காலியில் உட்கார்ந்தபடியே நெளிந்தார். முகம் சிவந்தது. ஆனால் என்ன செய்ய முடியும்?

தினமணி வைத்தியநாதய்யர்!

அடுத்து பேச வந்தார் வைத்தியநாதன். பார்ப்பன விஷத்தை கக்கினார்.

வள்ளலாரின் வடலூரில் நின்றுகொண்டு வள்ளுவரை பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். வள்ளுவரும், வள்ளலாரும் கொல்லாமையை, புலால் உண்ணாமையை வலியுறுத்தியவர்கள். எனவே, புலால் சாப்பிடுகிற வாயால் வள்ளுவரைப் பற்றி பேசுவது முறையாகுமா? புலால் உண வையும்,
கள்ளையும் யார் தவிர்க்கிறார்களோ அவர்களுக்கே திருக்குறளைப் பற்றி பேச முழுத்தகுதியும் உண்டு. புலாலையும் சாப்பிட்டுக்கொண்டு திருக்குறளையும் தேசிய நூலாக்க வேண்டும் என்று கேட்பது சரியாகுமா? புலால் உண்பவர்கள் திருக்குறளை பற்றிப் பேசும்போது குற்ற உணர்வோடுதான் பேசவேண்டும் என்று சமாளிக்க முயன்றார்.

பேராசிரியர் மோகனராசு அவர்களின் உரைக்குப் பதில் சொல்ல வக்கத்து வேறு கிளைக்குத் தாவும் பரிதாபத்தைப் பாரீர்!

எதிரிலே உட்கார்ந்திருக்கிற நூற்றுக்கணக்கான தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த தமிழ் ஆர்வலர்கள் பலரும் புலால் உண்பவர்கள் என்று நன்றாக தெரிந்திருந்தும் அவர்களுக்கு திருக்குறள் பற்றிப் பேசும் தகுதி இல்லை என்று அங்கேயே ஜாதி உணர்வோடு பேசினார்.

அதாவது புலால் உண்ணாமையை கடைப்பிடிக்கிற பார்ப்பனர்களுக்கு மட்டும்தான் திருக்குறளைப் பற்றி பேசுகிற முழுத்தகுதியும் உண்டு என்று மறைமுகமாகச் சொல்கிறார்!

கூட்டத்தில் அமர்ந் திருந்தவர்களோ,  கேலி யாக சத்தம் போட்டனர். அப்படிப் பேசிக்கொண்ட வர்கள் வைத்தியநாதனை காய்ச்சி எடுத்தார்கள்.

திருவள்ளுவரும், வள் ளலாரும் கொல்லாமையை மட்டும்தான் வலியுறுத்தி னார்கள் என்பதுபோல் பேசுகிறாரே? பிறப்பொக் கும் எல்லா உயிர்க்கும் என்றார் வள்ளுவர். வைத்தியநாதன் இதை ஏற்கக்கூடியவரா? பார்ப்பனர்கள்தான் உயர்ந்தவர்கள் என்று சொல்பவராயிற்றே என்றார் ஒருவர். சாதி, மதம், சடங்குகள், ஏன் உருவ வழிபாட்டுக்கே எதிரானவர் வள்ளலார்.

கண்மூடிப்பழக்கம் எலாம் மண்மூடிப்போக என்றார் வள்ளலார். வைத்தியநாதன் இதைப் பின்பற்றுகிறாரா? என்னமோ இவருக்கு மட்டுந்தான் வள்ளுவரையும், வள்ளலாரையும் பற்றி பேசுகிற தகுதி உண்டு என்கிற ரீதியில் பேசுகிறாரே என்றார் இன்னொருவர். புலால் உண்பதாலேயே எங்களுக்கு திருக்குறள் பற்றிப் பேசத் தகுதி இல்லை என்றால் உருவவழிபாட்டையும் பேதங்களையும் மனு தர்மத்தையும்,

வர்ணாசிரமத்தையும் ஏற்றுக் கொள்கிற வைத் தியநாதனுக்கு அந்தத் தகுதி முற்றாகவே கிடையாது என்றார் ஒரு முதிய தமிழன்பர். வைத்தியநாதனுக்கு பிறகு வேறு யாரையாவது உரையாற்றவிட்டிருந்தால், இந்த பார்ப்பனக் கருத்துகளை கிழித்தெடுத்திருப்பார்கள் என்றார் மற்றொருவர்.

 பெரியார் மறைந்தாலும்...

ஆக, ஒவ்வொருவரும் பெரியாரின் கருத்துகளை வெவ்வேறு குரல்களில் பேசிக்கொண்டேதான் அரங்கில் இருந்து கலைந்து சென்றனர். மறைந்து இத்தனை ஆண்டுகள் கழித்தும் பார்ப்பனர்களை குத்திக்குடைந்திருக்கிறார் பெரியார் என்பது இந்த விழாவே எடுத்துக்காட்டு! அதனால்தான், பார்ப்பனர்கள் பெரியார் என்ற பெயரைக் கேட்டாலே கொதிக்கிறார்கள்.

வைத்தியநாதன் அவர்களே, நீங்கள் எங்கே சென்றாலும் பெரியார் கருத்துகள் உங்களை தொடர்ந்துவரும். அதனால்தான், இதை பெரியார் மண் என்கிறோம். எச்சரிக்கையும், அசிங்கப்பட்டதற்கு வாழ்த்துகளும்!

- நமது சிறப்புச் செய்தியாளர்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...