Tuesday, December 18, 2012

அமெரிக்கா வளர்ந்த நாடா? ஆதிவாசிகளின் - வேட்டைக்காரர்கள் காடா?


அமெரிக்காவில் சில நாள்களுக்கு முன், கனெக்டிக்கெட் மாநிலத்தில் நியூடவுன் என்ற இடத்தில் இருந்த ஒரு பழைய பள்ளிக்கூடத்தில் நுழைந்த ஒரு மாணவன் திடீரென்று சரமாரியாகச் சுட்டதில் 20 பச்சிளங் குழந்தைகளான மாணவர்களும், ஆறு பெரியவர்களும் உயிரிழந்த சம்பவம் மிகவும் வேதனைக் கும் வெட்கத்திற்குமுரிய மனித நேயமற்ற காட்டுமிராண்டி காலத்திற்கு மக்களை அழைத்துச் செல்லும் நிகழ்வாகும்.
அமெரிக்காவில் இது - நம் நாட்டில் நடக்கும் சாலை விபத்துக்கள் போல் - சர்வ சாதாரணமானதாகி யுள்ளது.
அமெரிக்கா வளர்ந்த நாடு என்று அழைக்கப்படும் நாடு. அறிவியல், மின்னணுவியல், கட்டுமானங்களில் மட்டுமா அது வளர்ந்த நாடு? இதுபோன்ற படுகாட்டுமிராண்டித்தன அநாகரிகத்திற்கும் - மூடாக் கதவு களும், தடுக்கா சட்டக் கைகளும், கேளாக் காதுகளும் உள்ள நாடாகவும் அல்லவா இது அமைந்துள்ளது!
இதற்குமுன் சில மாதங்களுக்கு முன் (ஆகஸ்ட் 5) விஸ்கான்சின் மாநிலத்தில், பஞ்சாப் சீக்கிய அமெரிக் கர்களின் கோயிலான குருத்துவா ராவில் நுழைந்து அங்கு வழிபாடு நடத்திய சீக்கியர்களைச் சுட்டுக் கொன்ற கோர சம்பவம்; அதற்கு முன் (ஜூலை 20ஆம் தேதி) கொலரோடா மாநிலத்தில் திரைப்பட அரங்குக்குள் நுழைந்து படம் பார்த்துக் கொண் டிருந்த சிலரை சரமாரியாகச் சுட்டு விட்டு தானும் சுட்டுக் கொண்டவன்; அதற்கு முன் வர்ஜீஸ் மாநிலத்தில் ஒரு (ஆந்திராகாரர்) அமெரிக்க பேராசிரி யையைச் சுட்ட நிகழ்வு என்று ஏராளம் சொல்லலாம்!
ஏன் இப்படி சம்பந்தா சம்பந்தமில் லாதவர்களைச் சுட்டுக் கொன்று, தானும் சுட்டு தற்கொலை செய்து கொள்ளும் மனவக்கிரப் பேர் வழிகள் - மன கிறுக்கர்கள் - அமெரிக்காவில் பெருகி வருகின்றனர்?
பெரும் மனஉளைச்சல் என்று கூறுவது பகுத்தறிவாளர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. காரணம் மன உளைச்சல் உள்ளவர்கள் அமெரிக்கா வில் மட்டும் தான் இருக்கிறார்களா? உலகம் எங்கும் உள்ளார்களே!
இந்தியாவில் இல்லையா? இலங் கையில்  ஏராளம் இல்லையா?
மன உளைச்சலுக்காக தடியெடுத் தவன் எல்லாம் தண்டல்காரனாவது போன்று, துப்பாக்கி பிடித்தவன் எல்லோரையும் சுடுவதைக் காரணம் காட்டத் துவங்கினால், பலரும் மிஞ்ச மாட்டார்களே!
அமெரிக்காவில் உள்ள துப்பாக்கித் தொழிற்சாலை முதலாளித்துவம்தான், அங்குள்ள இரண்டு பெரும் அரசியல் கட்சிகளுக்கு பெரும் தேர்தல் பொருள் உதவும் ஊற்றுக்களாக உள்ளது. எனவே அவர்களை அடக்க எந்தக் கட்சி வேட்பாளர்களும் துணிவ தில்லை; துணிய முடியாது.
அவர்களிடம் யாசகம் வாங்கு பவர்களாகத்தான் அங்குள்ள அரசி யல் கட்சித் தலைவர்கள் உள்ளார்கள்! இந்நிலையில் அவர்கள் எப்படி இதனைத் தடுத்து நிறுத்திட சரியான சட்டம் கொண்டு வருவார்கள் என்று எதிர்பார்க்க முடியும்?
முதற் கட்டமாக, வயது வந்தவர் களுக்கு மட்டும்; அதுவும் போதிய கார ணங்கள் உள்ளவர்களுக்கு மட்டும் அவர்கள் தற்பாதுகாப்புக்காக மட்டுமே துப்பாக்கி வைத்திருக்கும் லைசென்ஸ் பெற முடியும் என்ற ஒரு துணிகரச் சட்டத்தை ஒபாமா நிருவாகம் கொண்டு வந்து நிறைவேற்றிட முன்வர வேண்டும்.
எந்த மாநிலமும் இதனைச் செயல் படுத்த வேண்டும் என்ற வகையில் இது ஒரு மத்திய சட்டம்  (Federal Law)  ஆக அமைதல் அவசரம் - அவசியம்!
இல்லையேல் மாணவப் பருவ பூ, பிஞ்சு மொட்டுக்கள்கூட  இந்த துப் பாக்கிக் கலாச்சாரத்திலேயே மூழ்கி எழுவார்கள்; துப்பாக்கிப் போதை Gun Addiction
என்பது அமெரிக்காவில் அங்கிங்கெனாதபடி பரவி, மக்கள் போதிய பாதுகாப்புடன் வாழ முடியாத, மவுடீக மாஃபியாக்களின் வேட்டைக் காடாகவே மாறி விடுவது உறுதி!
மனிதநேயம் என்பதுதான் உண்மை. ஜனநாயகத்தின் மூச்சுக் காற்றுக்கு அதிபர் ஒபாமா உரியது செய்தால் அவர் சரித்திரம் படைப்பார்.
-  ஊசிமிளகாய்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...