Friday, December 14, 2012

பார்ப்பனர்கள் ஜாதி ஒழிப்பு வீரர்களா?


பார்ப்பன ஏடுகளுக்கு இப்பொழுது ஜாதி ஒழிப்பின்மீது கவலை வந்ததாகக் காட்டிக் கொள்கிறார்கள். இந்த வார துக்ளக்காக இருந்தாலும் சரி, ஆர்.எஸ்.எஸின் விஜயபாரதமாக இருந்தாலும் சரி ஒரே படகில் பயணம் செய்வதை அறிய முடிகிறது.
60 ஆண்டு காலமாக திராவிடக் கட்சிகளின் காலத்தில்தான் ஜாதி - வெறியூட்டும் கருவியாக மாறியுள்ளதாம் - சொல்லுகிறது ஆர்.எஸ்.எஸ். இதழ்.
ஒரு கேள்வி: ஜாதிபற்றி விஜயபாரதம் பிரதிநிதித்துவம் படும் இந்துத்துவாவின் கருத்து என்ன? முதலில் அதனைச் சொல்லி விட்டு, இதில் மூக்கை  நுழைப்பதுதான் அறிவு நாணயம், அதனைப் புறந்தள்ளி குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் எத்து வேலையில் இறங்க நினைக்கக் கூடாது.
இவர்களின் குருநாதரான கோல்வாக்கர் என்ன கூறுகிறார்? இந்துத்துவாவின் வேத நூல் என்ற கூறப்படும் Bunch of Thoughts எனும் நூல் என்ன கூறுகிறது?
பழங் காலத்தில் ஜாதி அமைப்பு முறை இருந்தபோது அதன் உச்சியில் இருந்தோம். ஜாதி அமைப்பு முறை முன்னேற்றத்துக்கு முட்டுக் கட்டையாக இருக்கவில்லை. ஜாதி அமைப்பு முறை சமூகத்தில் ஒற்றுமையைக் கட்டிக் காக்கிறது என்று சொல்லியிருக் கிறாரே - அதற்கு என்ன பதில்?
வெகுதூரம் போவானேன்? மறைந்த இவர் களின் காஞ்சிப் பெரியவாள் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஜாதியையும் தாண்டி தீண்டாமை க்ஷேமகரமானது என்று கூறியுள்ளாரே - அந்தக் கருத்துத் தவறானது. நாங்கள் ஏற்றுக் கொள்ள வில்லை என்று விஜயபாரதம் துக்ளக் இதழோ அடுத்த இதழில் வெளிப்படுத்தத் தயாரா?
இன்னும் ஆவணி அவிட்டம் என்று ஒரு நாளை ஆண்டுக்கொரு முறை ஏற்பாடு செய்து பூணூலைப் புதுப்பித்துக் கொள்ளுவது ஜாதி ஒழிப்புக்கான சபதமா?
ஆம், நாங்கள் துவி ஜாதிதான் - இரு பிறப்பாளர்கள்தான். பிர்மாவின்  நெற்றியில் பிறந்தவர்கள்தான் - சூத்திரர்களாகிய நீங்கள் அடிமை மக்கள்தான், வேசி மக்கள்தான் என்று கூறாமல் கூறும் கூட்டம் திராவிடக் கட்சிகளால் ஜாதி வெறியூட்டப்படுகிறது என்று எழுதுகிறார்கள் என்றால், இவர்களைவிட கடைந்தெடுத்த மோசடிப் பேர் வழிகள் வேறு உண்டா?
ஜாதியை ஒழிப்பதற்காகத்தானே திராவிட ஆட்சி அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை பெற வேண்டும் என்று தந்தை பெரியார் அவர்களின் கருத்தினை ஏற்று சட்டம் செய்தது?
அதனை எதிர்த்து இன்று வரை அந்தச் சட்டத்தை உச்சநீதிமன்றம் சென்று முடக்கிய வர்கள் பார்ப்பனர்கள் தானே? அந்த நிலைப் பாட்டை இன்று வரை ஆதரிக்கிறவர்களா - கரு வறைக்குள், பார்ப்பனர்களின் ஜாதி ஆதிக்க ஆணவத்தைப் பாதுகாத்து வருபவர்களா - திராவிடர் இயக்கத்தைக் குறை கூறுவது?
பார்ப்பனர் சங்கம் மாநாடு கூட்டி, அரிவாளைத் தூக்கிக் காட்டி வன்முறை வெறியாட்டம் போட்ட போது இந்த துக்ளக்கோ, விஜயபாரதமோ ஒரு வரி கண்டித்து எழுதியதுண்டா?
திராவிடர் இயக்கம்தான் மக்கள் மத்தியில் ஜாதி, தீண்டாமையை எதிர்த்து விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை செய்து வந்திருக்கிறது.
தாழ்த்தப்பட்டோர் - மக்கள் குடியிருக்கும் பகுதிகளுக்குச் சென்று அவர்களின் வாழ்வு - தாழ்வுகளில் பங்கு ஏற்றார்கள்.
தாழ்த்தப்பட்டவர்கள் தன்னைத் தீண்டி விடக் கூடாது என்று கால்களில்  துணிகளைச் சுற்றிக் கொள்பவர் தானே (தாழ்த்தப்பட்டவர் பகுதிக்குச் சென்றதாக பெருமைப் பாட்டு வேறு!) இவர்களின் ஜெகத் குரு?
வெகு தூரம் போக வேண்டாம். காஞ்சி மடத்துக்குள் தாழ்த்தப்பட்ட தோழர் ஒரே ஒருவருக் குப் பணியமர்த்தம் செய்வார்களா?
குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயலும் பார்ப்பனர்களிடம் எச்சரிக்கை தேவை!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...