Thursday, November 8, 2012

பள்ளிகளில் கிரிக்கெட் பயிற்சி- எச்சரிக்கை!


இன்றைக்கு இளைஞர்களை, மாணவர்களைக் கெடுக்கும் பல்வேறு போதைகளில் கிரிக்கெட் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது என்று திராவிடர் கழகத் தலைவர் நீண்ட காலமாகவே கூறி வருகிறார். இந்தக் கருத்தை இன்றைக்கு வேறு பலரும் பொதுவாகச் சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.
வெள்ளைக்காரர்களால் அவர்கள் நாட்டில் உருவாக்கப்பட்ட இந்தச் சோம்பேறி விளையாட்டு சூரியன் அஸ்தமிக்காத பேராட்சியை மேற்கொண்ட இங்கிலாந்து எந்தெந்த நாடுகளைத் தன் ஆதிக்கத் தின்கீழ் கொண்டு வந்ததோ, அந்தந்த நாடுகளில் எல்லாம் இந்தக் கிரிக்கெட் விதையும் தூவப்பட்டது.
இந்தியாவைப் பொறுத்தவரை எப்படி பிரிட்டிஷார் ஆட்சி காலம் உள்ளவரை இந்தியாவில் நீடிக்க வேண்டும் என்று பார்ப்பனர் ஆதிக்கத்தில் இருந்த காலகட்டங்களில் காங்கிரஸ் மாநாடுகளில் தீர் மானங்களை நிறைவேற்றினார்களோ, அதுபோலவே வெள்ளைக்காரர்களின் கிரிக்கெட்டையும், சிக் கெனப் பிடித்துக் கொண்டனர்.
மற்ற மற்ற விடயங்களில் எல்லாம் சுதேசி பற்றி வாய்கிழியப் பேசும் பார்ப்பனர்கள் இந்தக் கிரிக்கெட்டில் மட்டும் அந்த வகையில் சிந்தனையைச் செலுத்த மாட்டார்கள்.
விவசாயம் - தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் கையில் இருக்கக்கூடிய காரணத்தாலும், அது உடலுழைப்பைச் சார்ந்ததாக இருப்பதாலும் அத னைப் பாவத் தொழில் என்று மனுதர்மம் சொல்கிறது.
உடலுழைப்புத் தேவைப்படும் விவசாயத் தொழிலை தாங்கள் செய்யாமல் தவிர்த்துக் கொள்ள சாஸ்திர ரீதியாக ஏற்பாடு செய்துகொண்டதைக் கவனிக்கவேண்டும்.
அதேபோல்தான் உடலுழைப்புக்கு அதிகம் வேலையில்லாத இந்தக் கிரிக்கெட்டையும் பெரும் பாலும் தங்கள் வலைக்குள் வளைத்துக் கொண்டு விட்டனர்!
ஊடகங்கள் பெரும்பாலும் பார்ப்பனர்களின் கைகளில் வலுவாக வசமாகிவிட்டதால், இந்தக் கிரிக்கெட்டை பொதுமக்கள் மத்தியில் பிரபலப்படுத்தி விட்டனர்.
உள்நாட்டு விளையாட்டும், உழைப்புக்கும், உண்மை யான திறமைக்கும் எடுத்துக்காட்டானதுமான சடு குடு, கால்பந்து, கைப்பந்து விளையாட்டுகளுக்கு இந்த ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்காமல் கூட்டி ஒதுக்கிவிட்டன. குறிப்பாக தொலைக் காட்சிகள் இந்த வேலையைச் செய்துவிட்டன.
இதன் காரணமாக கிராமங்களில் வயல்வெளி களில் கூட கிரிக்கெட் ஆக்கிரமிப்புச் செய்துவிட்டது. இப்படி ஒரு போதையை ஏற்றி, மக்களிடம் பண வசூல்மூலம் பெரும் சுரண்டல் தொழிலை நடத்தி வரு கின்றனர். ஒரு போட்டி அரசாங்கம்போல கிரிக்கெட் வாரியத்தின் வரவு - செலவு அமைந்துவிட்டது.
கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஆவதற்குக் கடும் போட்டி - அதிலும் ஏகப்பட்ட ஊழல் - நீதிமன்றம் வரை சிரிப்பாய் சிரிக்கிறது.
கிரிக்கெட் விளையாட்டுக்காரர்கள் மட்டும் அல்ல - நடுவர்கள்கூட சூதாட்டத்தில் சிக்கி, விளையாட்டு என்பதன் வீரியமே கொச்சைப்படுத்தப்பட்டு விட்டது.
பணம் காய்ச்சி மரமாகி விட்டது கிரிக்கெட், டெண்டுல்கருக்கு விளம்பரம் ஒன்றுக்கு எட்டு கோடி ரூபாயாம். நூறாவது சதம் அடித்ததற்காக ஹேமில் டன் பிளான்ட் என்னும் நிறுவனம் ரூ.30 கோடி அளித்துள்ளது.
கிரிக்கெட்டில் அவருக்கு இதுவரை கிடைத்தது 500 கோடி ரூபாயாம், என்ன கொள்ளை இது!
அதுவும் அய்.பி.எல். 20-20 ஆட்டம் வந்தாலும் வந்தது, பகற்கொள்ளைதான். நிமிடம் ஒன்றுக்கு ஆட்டக்காரருக்குச் சம்பளம் ரூ.1200.
இவ்வளவுக் கொள்ளை அடிப்பவர்களுக்கு அரசு அளிக்கும் சலுகைகளோ கொஞ்சநஞ்சமல்ல!
எல்லாவற்றையும் பெரும் கேடு நம் இளைஞர் களின் மத்தியில் ஏறிய சகிக்க முடியாத போதை யாகும்.
இந்தக் கிரிக்கெட் போதையை மேலும் பரப்பும் வகையில் திட்டமிட்ட ஒரு வேலையில் பார்ப்பனர்கள் இறங்கியுள்ளனர். தமிழ்நாடு ஸ்கூல்ஸ் கிரிக்கெட் அசோசியேசன் என்னும் ஓர் அமைப்பை உண்டாக்கி, தமிழ்நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்குக் கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிக்கும் ஒரு வேலையில் இறங்கியுள்ளனர். (இது ஒரு வகையான பார்ப்பனர் பண்பாட்டுப் படையெடுப்புதான்!)
குறிப்பாக, நாகை மாவட்டத்தில் கொள்ளிடக் கரை முதல் கோடியக்கரைவரை 200 பள்ளிக்கூடங் களுக்கு இவ்வாறு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
அரசு அனுமதியுடன் இது நடக்கிறதா? அரசுப் பள்ளிகளில் தனியார் அமைப்புகள் இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபடலாமா? தமிழ்நாடு கல்வித் துறை இதில் தலையிடவேண்டும் என்பது நமது அழுத்தமான வேண்டுகோளாகும்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...