Wednesday, August 15, 2012

ஆகஸ்டு 15


இந்தியாவின் சுதந்திரம் அஷ்டமி, நவமி பார்த்து பெற்றுக் கொள்ளப்பட்டது. நேரு அவர்கள் தம்மைப் பகுத்தறிவுவாதி என்று சொல்லிக் கொண்டாலும் பார்ப்பனர்களின் - ஆன்மீக ஆதிக்கவாதிகளின் அழுத்தத்திற்குச் செவி சாய்க்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
இந்தியாவில், மக்களின் அடிப்படை வசதிகள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று குற்றங் கூறும் கடவுள் - மத நம்பிக்கையாளர்கள்கூட, நல்ல நேரம் பார்த்து சுதந்திரம் பெற்றும் பயனில்லை எனும் கோணத்தில் சிந்திப்பதும் இல்லை - அந்த வகையில் கருத்துகளைக் கூறுவதும் இல்லை. இரவில் வந்த சுதந்திரம் இன்னும் விடியவில்லை என்று பகுத்தறிவுக் கவிஞன், புரட்சிக்கவிஞன் சொன்னதுதான் சரியாகி விட்டது என்பதையாவது ஒப்புக்கொள்ளவேண்டும் - அதுதான் அறிவு நாணயம் என்பதும்கூட!
பொருளாதார நிலையை எடுத்துக்கொண்டால்  இன்னும் 37 கோடி மக்கள் வறுமை நிலையிலேயே உழலுவதாக திட்டக் குழுவின் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா கூறியுள்ளார்.
எவ்வித சொத்துக்களும் இந்தியாவில் இல்லாத வர்கள் 18 விழுக்காடு - இதில் கிராமப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் 23 விழுக்காடாகும்.
கிராமப்புற மக்களில் நான்கில் ஒருவருக்குக் குடியிருக்க வீடு இல்லை, முறையாக துப்புரவு வசதியற்றோர் 50 விழுக்காடு, சுத்திகரிக்கப்படாத குடிநீரை அருந்துவோர் 68 விழுக்காடு.
கல்வி வளர்ச்சியை எடுத்துக்கொண்டால், இந் தியா உலகின் 72 ஆம் இடத்தில் உள்ளது. இந்தியா வில் பள்ளிகளில் இடைநிற்றல் பெண்கள் 70 விழுக் காடாகும்.
இந்திய அரசமைப்புச் சட்டம் அறிமுகப்படுத்தப் பட்டு 10 ஆண்டுகளுக்குள் 14 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் அடிப்படைக் கல்வி என்பது ஏட்டுச் சுரைக்காயாகி விட்டது.
ஆண் - பெண் சமத்துவம் என்பதை எடுத்துக் கொண்டால் 146 நாடுகளின் பட்டியலில் இந்தி யாவுக்கு உரிய இடம் 129. இதில் வேடிக்கை என்ன வென்றால் முசுலிம் நாடாகிய வங்கதேசம்கூட 112 ஆவது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 115 ஆம் இடத்தில் உள்ளது.
இந்திய நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு இப்போது உள்ள இடம் 10 விழுக்காட்டுக்குமேல் இல்லை; வங்கதேசத்திலோ பெண்கள் 18 விழுக்காடு அளவுக்கு இடம்பெற்றுள்ளனர்.
50 சதவிகித ஆண்கள் இந்தியாவில் உயர்கல்வி கற்றுள்ள நிலையில் பெண்களோ வெறும் 25 விழுக் காடுதான்!
விவசாயிகள் நிலையோ பரிதாபத்தின் அடித்தளம் தான். இந்தியாவில் மணி ஒன்றுக்கு மூன்று விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர். 1993 முதல் 2006 வரை தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை ஒன்றரை லட்சம். (மத்திய விவசாயத் துறை அமைச்சர் சரத்பவார் நாடாளுமன்றத்தில் கூறிய தகவல்தான் இது - 1.12.2011).
வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள் 65 விழுக்காடு உள்ள இந்தியாவில் முடக்கப்பட்டுள்ள தங்கத்தின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? 47.5 லட்சம் கோடி ரூபாய் (18 ஆயிரம் டன்).
இதில் பெரும்பான்மை, கோவில்களில் முடங்கிக் கிடக்கிறது.
2011 ஜூலை 14 முதல் 16 வரை சீரடி சாயிபாபா கோவிலில் நடைபெற்ற குருபூர்ணிமா விழாவில் மட்டும் குவிந்த தங்கக் காசுகளின் மதிப்பு ரூபாய் ஒரு கோடியே 25 லட்சமாம்.
இந்தியாவில் இருக்கக் கூடிய முக்கியமான கோவில்களின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
திருப்பதி ஏழுமலையான் கோவில் ரூ.42 ஆயிரம் கோடி.
சிம்லா வைஷ்ணவி கோவில் ரூ.51 ஆயிரம் கோடி
குருவாயூர் கிருஷ்ணன் கோவில் ரூ.125 கோடி
மும்பை சக்தி விநாயகர் ரூ.125 கோடி
சீரடி சாயிபாபா கோவில் ரூ.427 கோடி
இப்படிப் போகிறது உயிரற்ற இந்தத் திடப் பொருள்களுக்கு (கடவுளுக்கு) இவ்வளவு சொத்து இருந்து பயன்?
உயிருள்ள மக்கள் பட்டினியால் வாடும் நாடுகளின் வரிசையில் இந்தியா 67 ஆம் இடத்தில் இருக்கிறது. ஒன்றுக்கும் உதவாது முடங்கிக் கிடக்கும் தங்கங்களை மக்களின் வளர்ச்சித் திட்டங்களுக்குப் பயன்படுத்தக் கூடாதா?
இந்தியா உண்மையில் வறுமையான நாடல்ல - வறுமையாக ஆக்கப்படும் நாடு.
கடவுளை மற - மனிதனை நினை என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்னதில் பகுத்தறிவு மட்டு மல்ல - பொருளாதார வழி திறப்பும் இருக்கிறது என் பதை ஆகஸ்டு 15 ஆம் நாளிலாவது ஆட்சியாளர்கள் சிந்திக்கட்டும்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...