Monday, December 5, 2011

ஒரு கிலோ குங்குமப்பூ (Saffron) பெறுவதற்கு எத்தனை மலர் மொட்டுகள் (crocuses)தேவை?


ஒரு கிலோ குங்குமப்பூ பெறு வதற்கு அச்செடியின் 85,000 முதல் 1,40,000 மலர் மொட்டுகள் தேவைப்படும். அதனால்தான் இன்றும் உயர்ரக ஸ்பானிஷ் மஞ்சா என்னும் குங்குமப் பூவின் விலை பவுண்டுக்கு 3,750 பவுண்டுகளாக உள்ளது.

குங்குமப்பூ மலர் மொட்டுகள் சேகரிக்கப்படுவதைப் பற்றி கி.பி. 1600 இல் வரையப்பட்ட ஓவியங்கள் மினோ வன்  அருங்காட்சியகத்தில் உள்ளன. தனது தலைமுடி ஆரஞ்சு வண்ணத்தில் அழகாக விளங்கவேண்டும் என்று விரும்பிய பேரரசர் அலெக்சாண்டர் குங்குமப்பூ சாற்றில் தனது தலை மயிரை கழுவுவார் என்று கூறப்படுகிறது. இன்றைய தலை முடிக்குப் பயன்படுத்தும் வேதியியல் கலவையான ஷேம்பூவைப் போன்றது இந்த குங்குமப்பூ சாறு.  அக்காலத்தில் தங்கத்தை விட அதிக விலை கொண்ட குங்குமப்பூ வைரத்தைப் போல மிக அரிதானதாக இருந்தது.

15 ஆம் நூற்றாண்டு நியூரம்பர்க்கிலும், இங்கிலாந்தில் 8 ஆம் ஹென்றியின் ஆட்சிக் காலத்திலும், குங்குமப் பூவுடன் வேறு வேறு பொருள்களைக் கலந்து விற்பனை செய்வது ஒரு பெரும் குற்றமாகக் கருதப்பட்டது. இக்குற்றம் புரிந்தவர்கள் கட்டி வைத்து எரிக்கப்பட்டனர் அல்லது அவர்களின் சட்டத்துக்குப் புறம்பான பொருள்களுடன் சேர்த்து புதைக்கப்பட்டனர். எஸ்ஸெக்சில் உள்ள சேஃப்ரான் வால்டன் என்ற நகரம் இந்த வாசனை திரவியப் பொருளான குங்குமப்பூவின் பெயரைக் கொண்டிருந்தது. இங்கிலாந்து நாட்டின் குங்குமப்பூ சந்தையின் மய்யமாக விளங்கியது இந்நகரம். திருடப்பட்ட குங்குமப்பூ மொட்டுகளைத் தன் கைத்தடியில் ஒளித்து வைத்துக் கொண்டு மத்திய ஆசியாவிலிருந்து வந்த பயணி ஒருவரின் மூலம் இது 14 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்துக்கு வந்ததாக நாடோடிக் கதை ஒன்று தெரிவிக்கிறது. தேயிலை, காபி, வெண்ணிலா மற்றும் சாக்லேட் ஆகியவைகள் பயிரிடத் தொடங்கப்பட்ட காலத்தில்தான், குங்குமப்பூ பயிரிடுவது குறைந்தது. என்றாலும் அது இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் நாடுகளில் முக்கியமான பயிராக விளங்கியது. மஞ்சள் என்னும் பொருள் தரும் அஸ்பார் asfar  என்னும் சொல்லில் இருந்து தோற்றம் பெற்றது சேஃப்ரன் (Saffron)    என்னும் சொல்.

(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன் ‘The Book of General Ignorance’ பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்.)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...