Thursday, December 22, 2011

குமுதம் ரிப்போர்ட்டர்க்கு வக்கீல் நோட்டீஸ்



25.12.2011 அன்று நாளிட்ட குமுதம் ரிப்போர்ட்டர் என்ற ஏட்டில், செக் மோசடி வில்லங்கம் வீரமணி கைதாவாரா? என்ற தலைப்பில் வெளிவந்துள்ள அவதூறு பரப்பும் நோக்கில் உண்மைக்கு மாறான பல தகவல் களைக் கொண்ட கட்டுரை - செய்தியாளர் அச்செய்தியைத் தந்தவர், அச்சிட்டு வெளி யிட்ட வரும் ஆகிய மூவர்களான
1. குமுதம் ரிப்போர்ட்டரின் அச்சிடுவோர், வெளியிடுவோரான பா.வரதராஜன்,
2. குமுதம் ரிப்போர்ட்டர் செய்தியாளர் - கட்டுரையாளர் ஜி.வெங்கட்ராமன்,
3. பி.இராமசாமி என்ற டெல்லி நபர் ஆகியோருக்கு அக்கட்டுரை எப்படி அவதூறான தகவல்களைக் கொண்டுள்ளது என்பதை விளக்கி அதில் கண்டுள்ள பொய்ச் செய்திகளை மறுத்து,
இக்கட்டுரைக்காக மன்னிப்புக் கேட்பதோடு முக்கிய பக்கத்தில் மறுப்பு உடனடியாக வெளியிட வேண்டும் என்றும், அப்படி வெளியிடப்படா விட்டால், சிவில், கிரிமினல் சட்ட நடவடிக்கைகள் இவர்கள்மீது எடுக்கப் படும் என்றும், பெரியார் மணியம்மை பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் நல்.இராமச்சந்திரன் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் த.வீரசேகரன் அவர்கள் வக்கீல் நோட்டீசு அனுப்பி யுள்ளார்கள்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...