Thursday, October 14, 2010

ஆயுத பூஜை - வரலாறு தரும் பாடம்!


தஞ்சையை ஆண்ட கடைசி நாயக்க மன்னன் செங்கமலதாசன் என்பவனை வீழ்த்த வேதியர் வெங்கண்ணா என்பவன் பிஜப்பூர் சுல்தானின் படைத்தலைவன் வெங்காஜி என்பவனை வேண்டி னான்.
வெங்காஜியும் வெங்கண்ணாவின் தூண்டு தலின் பேரில் தஞ்சை மீது படையெடுத்து வந்தான். அவன் படையெடுத்து வந்த சமயமானது ஆயுத பூஜை சமயமாகும். படை வீரர்களின் படைக் கலங்கள் எல்லாம் ஆயுத பூஜைக்காக கொலுவில் வைக்கப்பட்டிருந்தன.
மன்னன் செங்கமலதாசனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. மனக்கலக்கம் அடைந்தவனாய் பார்ப்பன அமைச்சர்களையும், பார்ப்பன குருமார்களையும் அழைத்து ஆலோசனை கேட்டான். அதற்கு அந்தப் பார்ப்பனர்கள், மன்னர் மன்னா! கவலைப்படாதீர்கள்! ஆயுத பூஜையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள ஆயுதங்களை எடுத் தால் சாஸ்திர விரோதம். நம் நாட்டின்மீது படையெடுத்து வருபவன் முகமதியன் அல்லன். படையெடுத்து வருபவன் அவனது தளபதியான வெங்காஜியாவான். அவனோ ஓர் இந்து. மேலும் பரம வைணவன். ஆகவே, திருமாலுக்கு மிகவும் உகந்த திருத்துழாய்களை (துளசிச் செடிகளை) நமது நகரின் எல்லையில் தூவிவிட்டால், அவன் அதனைத் தாண்டி படைகளைச் செலுத்திக் கொண்டு வரமாட்டான் என்று சொன்னார்கள்.
மன்னனும், அவர்களின் கூற்றினை ஏற்று, துளசிச் செடிகளை நகரின் எல்லையில் ஏராளமாகக் குவிக்கச் செய்துவிட்டு, தானும் பார்ப்பனர்களுடன் சேர்ந்து கொண்டு ஹரி பசனைச் செய்துகொண்டு இருந்தான். வெங்காஜியின் படைகளின் குதிரை களோ, குவிந்திருந்த துளசிச் செடிகளைப் புல்லென எண்ணி, அதிவிரைவாகவும், அனாயசமாகவும் வாயில் கல்விக் கொண்டு நகருக்குள் புகுந்தன.
இதனைக் கேள்வியுற்ற மன்னன் செங்கமல தாசன், வெங்காஜி சத்தியம் கெட்டவன், திருமாலின் திருத்துழாயினை மதிக்கவில்லை. ஆகவே, அவனுடன் போர் செய்தல் கூடாது என்று கூறி, யாரும் அறியாமல் எங்கோ ஓடி ஒளிந்து விட்டான்.
வெங்காஜியின் படைகள் செங்குருதி சிந்தா மலும், வாளை எடுக்காமலும், வேலைத் தூக்கா மலும் எளிதில் தஞ்சையினைக் கைப்பற்றின.
ஆயுத பூஜை கொண்டாடும் பக்தர்களும், வணிகர்களும், பொது மக்களும் இதற்குப் பிறகும் ஆயுத பூஜை கொண்டாடுவார்களேயானால், வரலாற்றின் பாடத்தைக் கற்றுக் கொள்ளத் தயாராக இல்லை என்றுதான் பொருள்.
இந்து மதக் கடவுள்களின் கைகளில் கூட ஆயுதங்கள் இருக்கத்தான் செய்தன. அவை யெல்லாம் கொலைக்குப் பயன்படும் கருவிகள்தாம். இருந்தும் என்ன பயன்? கோவிலுக்குள் புகுந்து சாமி சிலைகளையே தூக்கிக் கொண்டு போய் வெளிநாட்டில் விற்று விடுகிறார்கள்.
உருவமற்ற கடவுள்கள் என்று ஒரு பக்கத்தில் கூறிக்கொண்டு, கற்பனைக்குத் தகுந்த உருவங் களைப் படைத்து அவற்றின் கைகளில் ஆயுதங் களைக் கொடுப்பதெல்லாம் சிறுபிள்ளை விளை யாட்டு அல்லவா! ஆன்மிகப் பொய்கையில் குளித்து எழுந்த வடலூர் இராமலிங்க அடிகளார் இந்தப் பொய்யுரைக்கும், கற்பனைகளைச் சாடவில்லையா?
கடவுளை நம்புபவர்கள்கூட சிந்திக்க வேண் டியவை பல உள்ளன. கருணைக்கடல் கடவுள் என்று கூறிக்கொண்டு சூலாயுதம், வேலாயுதங் களைக் கடவுள் கைகளில் கொடுத்திருக்கி றார்களே என்று சிந்திக்கவேண்டாமா?
தொழில் அபிவிருத்திக்காக ஆயுதங்களுக்கு நன்றி என்பதுகூட அறிவுக்குப் பொருத்தமாகாது. காலுக்கு செருப்பு அவசியம்தான் - அதற்காக அதற்குப் பூஜை போட முடியுமா?
எத்தனை ஆயிரம் ஆண்டுகாலமாக ஆயுதங்களுக்குப் பூஜை போடுகிறோம்? பூஜை போடும் நாட்டைச் சேர்ந்தவர்கள் உருப்படியாகக் கண்டு பிடித்த கருவிகள், ஆயுதங்கள் என்ன? விரலை மடக்க முடியுமா?
புதுப்புது உருவத்தில் கடவுள்களை உருவாக்கி யதைத் தவிர நாம் சாதித்ததுதான் என்ன?
பக்தர்கள் சிந்திப்பார்களாக!


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...