Wednesday, February 12, 2020

கேரளாவில் பெற்றோரை கவனிக்காமல் விட்ட பிள்ளைகள் மீது 15,650 வழக்குகள்

கேர ளாவில்  கடந்த 4 வருடங்களில்  பெற்றோரை கவனிக்காத பிள்ளைகள் மீது 15,650 வழக் குகள்  பதிவு செய்யப்பட்டுள் ளன.    கேரள சட்டப்பேரவை யில் சமூக நலத்துறை அமைச் சர் சைலஜா கூறியதாவது:
வயதான  பெற்றோரை கவனிக்காத பிள்ளைகள்  மீது வழக்குப்பதிவு செய்ய சட்டத் தில் இடம்  உண்டு. இதன்படி பெற்றோரை  பராமரிக்கா விட்டால் பிள்ளைகளுக்கு 3 மாதம் வரை  சிறையோ, 5 ஆயி ரம் அபராதமோ  அல் லது இரண்டும் சேர்த்தோ விதிக்க சட்டத்தில்  இடம் உள்ளது.
கேரளாவில்  பெற்றோரை கவனிக்காத பிள்ளைகள் எண்ணிக்கை  அதிகரித்துள் ளது. கடந்த 4  ஆண்டுகளில் இதுதொடர்பாக 15,650 வழக் குகள் பதிவு  செய்யப்பட்டுள் ளன. 2016-17ல்  4767 வழக்கு கள், 2017-18இல் 3356 வழக்கு கள்,  2018-19ல் 4300 வழக்குகள், 2019-20இல் இதுவரை 3227 வழக்குகள் பதிவு  செய்யப்பட் டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...