Friday, July 20, 2012

குபேரனிடம் ஏழுமலையான் வாங்கிய கடன் எவ்வளவு?


  • தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பக்தர் கேள்வி
  • இது பைத்தியக்காரத்தனம் என்கிறார் கோவில் நிர்வாகி
பெங்களூர், ஜூலை 20-திருப்பதி ஏழுமலையான் தனது திருமணத்துக்காக, குபேரனிடம் எவ்வளவு கடன் வாங் கினார் என்பது உட்பட, பல்வேறு கேள்விகளுக்கு திருமலை  திருப்பதி தேவஸ்தானத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பதில் கேட்டுள்ளார் பெங்களூரை சேர்ந்தவர்; கோவில் நிர்வாக அதிகாரியோ இதனை பைத்தியக்காரத்தனம் என்கிறார்.
பத்மாவதி தாயாரைக் காதலித்த ஏழுமலையான் அவரை திருமணம் செய்து கொள்ள குபேரனிடம் கடன் வாங்கியதாகவும், அந்தக் கடனை இன்னும் அடைக்காமல் இருப்பதாகவும் புராணங்கள் கூறுகின்றன. வாங்கிய கடனை அடைக்க பக்தர்கள் காணிக்கை கொடுக்க வேண்டும் என்று திருப்பதியில் வைக்கப்பட்டுள்ள உண்டியலில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. இந்த வாசகத்தின் அடிப்படையில் பெங்களூரைச் சேர்ந்த நரசிம்ம மூர்த்தி என்பவர், தேவஸ் தானத்திடம் கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், புராண காலத்தில் பத்மாவதி தாயாரை திருமணம் செய்து கொள்ள, குபேரனிடம் ஏழுமலையான் வாங்கிய கடன் எவ்வளவு என்பது உட்பட பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். இதற்கு கடந்த 6 மாதம் கடந்தும் திருமலை  திருப்பதி தேவஸ்தானம் பதில் கொடுக்கவில்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கும் கேள்விகளுக்கு ஒரு மாதத்துக்குள் பதில் கொடுக்க வேண்டும் என்று விதிமுறை உள்ளது.
ஆனால் 6 மாதம் கடந்தும் பதில் கொடுக்காததால், தேவஸ்தானத்துக்கு எதிராக 2 நாட்களுக்கு முன் ஆந்திர மாநில தகவல் அறியும் உரிமை ஆணையத்திடம் நரசிம்ம மூர்த்தி புகார் கொடுத்துள் ளார். இது குறித்து விளக்கம் கேட்டு திருப்பதி தேவஸ் தானத்துக்கு ஆணையம் தாக்கீது அனுப்பியுள்ளது.
கடந்தாண்டில் (2011) தேவஸ் தானத்துக்கு கிடைத்த வருமானம்
உண்டியல் காணிக்கை - ரூ.731.00 கோடி
வங்கி டெபாசிட் வட்டி - ரூ.405.23 கோடி
விஅய்பி டிக்கெட் வருவாய் - ரூ.165 கோடி
முடி காணிக்கை வருவாய் - ரூ.179 கோடி
பிரசாதம் விற்பனை - ரூ.135 கோடி
தங்கும் அறைகள் வருவாய் - ரூ.69 கோடி
ஆர்ஜித டிக்கெட் வருவாய் - ரூ.43 கோடி
தங்க டாலர் விற்பனை - ரூ.17 கோடி
ஓட்டல், கடைகள், மொட்டை கட்டணம் - ரூ.90.47 கோடி
திருமணத்துக்காக குபேரனிடம் ஆலோசனை நடத்தி பதில் தேவஸ்தானம் தகவல்
திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சீனிவாசராவ் கூறுகை யில், ஏழுமலையான் தனது திருமணத் துக்காக வாங்கிய கடன் எவ்வளவு என்பது உள்ளிட்ட கேள்விகள் எதுவும் எங்களுக்கு வரவில்லை. வந்தால், அறங்காவலர் குழு நிர்வாகிகள், ஜீயர் சுவாமிகள், அதிகாரிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி பதில் அளிக்கப் படும் என்றார்.
திருமலை திருப்பதி தேவஸ் தான மக்கள் தொடர்பு அலுவலர் ரவி கூறுகையில், இது மதம் தொடர்பான பிரச்சினை. இந்த மாதிரி கேள்விகள் கேட்பது பைத்தியக்காரத்தனம் என்றார்.
புராணக் கதைகள்
திருப்பாற்கடலில் வந்த பிருகு முனிவர், தன்னை கண்டு கொள்ளாமல் அவமதித்த தாக மஹாவிஷ்ணு மார்பில் எட்டி உதைத்தார்.
அடி வாங்கியும் அமைதி யான விஷ் ணுவோ, முனிவரின் காலை அழுத்தி பிடித்து விட்டார். இதை கண்டதும் முனிவர் தன் செயலுக்காக வெட்கப்பட்டார். மகாலட் சுமிக்கு வந்ததே கோபம். எட்டி உதைத்த முனிவரை சக்ராயுதத் தால் வெட்டி வீழ்த்தாமல், ஒத் தடம் கொடுக்கிறாரே என்று கோபத்துடன் வெளியேறி பூலோகத்தில் ஒரு அரண்மனை தோட் டத்தில் குழந்தையாய் கிடந்தாள்.
காதல் மலர்ந்தது எப்படி?
மன்னன் ஆகாச ராஜன் இந்த குழந்தையை தன் மகளாக வளர்த்தார். மகாலட்சுமி இல்லாமல் வருந்திய விஷ்ணு, உடனே சிறீநிவாசன் என்ற பெயரில் வேடனாக பூலோகம் வந்தார். ஆகாசராஜனின் மகளாக, பத்மாவதி என்ற பெயருடன் மகாலட்சுமி வளர்வது கண்டு அவள் மீது காதல் கொண்டார். பத்மாவதிக்கும் காதல் மலர்ந்தது. திருமணம் முடிக்க சம்மதித்த ஆகாச ராஜன், பல கோடிக்கு சீதனம் தர வேண்டும் என்று நிர்ப்பந்தித்தார். (இவையெல்லாம் புராணக் கதைகள்)
கடன் பட்டது எப்படி?
உடனே சிறீநிவாசனான மஹா விஷ்ணு குபேரனை அணுகி ஆயிரம் கோடி வராகன் (பன்றி முத்திரையுடன் கூடிய பொற்காசு) கடனாக பெற்றார். இதற்காக ஒரு கடன் பத்திரமும் எழுதப்பட்டது. கலியுகம் முடியும்வரை வட்டி மட்டுமே செலுத்தினால் போதும்; அடுத்த யுகத்தில் அசலை அடைத்து விட வேண்டும் என்பதே நிபந்தனை.
வட்டி கட்டுவது எப்படி?
அதர்மமான வகையில் கோடியை போடுவோர் காணிக்கையை வட்டியாக வும், தர்ம வழியில் சம்பாதிப்போர் காணிக்கையை அசலின் ஒரு பகுதி யாகவும் பெறுவது என்று ஏழுமலை யான் முடிவு செய்தார்.
குபேரனுக்கு போகுமா?
குபேரனுக்கு கொடுப்பதற்காக காணிக்கை செலுத்தும் பக்தர்களுக்காக திருமலையில் அன்னதானம் முதலான பல வசதிகள் செய்து தருவதும், பக்தர்கள் தரிசித்து மகிழ பலவாறாக பெரு மாளுக்கு அலங்காரம் செய்வதும், இந் தியா முழுவதும் பல தர்ம காரியங்களை நடத்துவதுமாக (குபேரனுக்கு) போய்ச் சேருகிறது என்றும் சொல்லலாம். இப்படியெல்லாம் கதை.
மதம் சம்பந்தமான பிரச்சினையில் இப்படியெல்லாம் கேள்வி கேட்பது பைத்தியக்காரத்தனம் என்கிறார் கோயில் மேலாளர். இந்தப் பைத்தியக்காரத்தனத் தின் அடிப்படையில் கோயில் கட்ட லாமா? உண்டியல் வசூல் செய்யலாமா? இதனை எந்தப் பைத்தியக்காரத்தனப் பட்டியலில் சேர்ப்பதுவோ!


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
அடுத்து >>


JULY 16-31



No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...