Monday, December 19, 2011

இனமானப் பேராசிரியர் வாழ்க! வாழ்கவே!! திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி


இன்று (டிசம்பர் 19, 2011) நம் இனமானப் பேராசிரியர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் மானமிகு க. அன்பழகனார் அவர்களது 90 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா.

காட்சிக்கெளியர்; கருத்துக் கருவூலம்; பெரியாரின் சுயமரியாதை இயக்கக் கொள்கைகளை எந்த மேடையிலும் முழங்கத் தவறாத முழுதாய்ந்த பாவலர்; தனக்கென சொற்பொழிவு மேடைகளில் தனி பாணியை வகுத்துக் கொண்டு தர்க்கரீதியான வாதங்களை, கேட்போரை ஏற்போராக மாற்றும் சக்தி வாய்ந்த சொலல் வல்லர்.

மனதிற்பட்டதை மறைத்துப் பேசத் தெரியாத மாண்பாளர்; இரட்டை வேடம் தரிக்காதவர் எக்காலத்திலும்!

அறிஞர் அண்ணாவின் பாசத்திற்குரிய தம்பியாக, தத்துவ விளக்க கர்த்தாவாகத் திகழ்பவர். கலைஞரின் தலைமைக்கு என்றும் மாறாத விசுவாசம் காட்டும் மூத்த முதிர்ச்சியாளர். அவ்விருவரும் வீணையும் நாதமும் போல, சோதனை மிக்க ஆண்டுகளிலும் திராவிடர் அரசியல் இயக்கமாம் தி.மு.க.வை நடத்தி வரும் நிலையில், அகவை 90 காணும் அருமைப் பேராசிரியர் அவர்கள் எங்கெங்கும் சென்று எழுச்சியுரையாற்றி திராவிடர் இயக்கத்தின் திறன் மிக்க லட்சியக் கவசமாய்த் திகழ்கிறார்கள்.

அவர்கள் நல்ல உடல் நலத்தோடு, பல்லாண்டு, பல்லாண்டு வாழ்ந்து, தாழ்ந்த தமிழகத்தை தலை நிமிரச் செய்து, திராவிடத்தின் மறுமலர்ச்சியை மீண்டும் உருவாக்கி புதிய வெற்றிகளை - இயக்கத்திற்கு, கொள்கை லட்சியங்களுக்குத் தருவார்களாக!

அடக்கமும், ஆழமும் அவரிடமிருந்து இளைய தலைமுறை கற்க வேண்டிய கவினுறு பாடங்களாகும்!

வாழ்க இனமானப் பேராசிரியர்!

வளர்க அவர் போன்றவர்களால் பாதுகாக்கப்படும் திராவிடர் இயக்கம்!!
கி. வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்


.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...