Tuesday, December 20, 2011

தமிழக ஊடகத் துறையினரின் முக்கியக் கவனத்துக்கு...


முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தமிழர்கள் மலையாளிகளால் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர் - அதன் எதிரொலியாக தமிழ்நாட்டிலும் அங்கொன்றும், இங்கொன்றுமாக எதிர் நடவடிக்கை கள் நடந்து வருகின்றன.
கேரள மாநில தொலைக்காட்சிகள் மலையாளிகள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாகப் பெரிதுபடுத்தித் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பிக் கொண்டு இருக்கின்றன. அதே நேரத்தில் தமிழர்கள் தாக்கப் படுவது முற்றிலும் இருட்டடிப்புச் செய்யப்படுகிறது.
இதனைப் புரிந்து கொள்ளாத தமிழ்நாட்டுத் தொலைக்காட்சிகளும், ஊடகங்களும் தமிழ்நாட்டில் கேரளக்காரர்கள் தாக்கப்படுவது போன்ற தகவல்களை மிகைப்படுத்தி ஒளிபரப்பிக் கொண்டு இருக்கின்றன.
தமிழகத்தைச் சேர்ந்த நிறுவனங்களும் மலையாள மொழியிலும் தொலைக்காட்சி களை நடத்திக் கொண்டு இருக்கின்றன. அவற்றிலும் கேரளக்காரர்களைத் தமிழர்கள் தாக்குவது போன்ற காட்சிகளை ஒளிபரப்பிக் கொண்டு இருக்கின்றன. கேரளக்காரர்களின் யுக்தி தமிழ் ஊடகங்களுக்கு இல்லாமல் போவதேன்?

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...