Monday, December 19, 2011

விடுதலைபற்றி புரட்சிக்கவிஞர்


விடுதலைபற்றி புரட்சிக்கவிஞர்
முக்கியமாகத் தமிழ்ப் பெரு மக்களுக்கு நான் சில வேண்டு கோள்விட ஆசைப்படுகிறேன். முதலாவதாக, பெரியார் கொள்கை ஒன்றுதான் நாட்டிற்கு ஏற்றது. உண்மையாக மக்களின் நன் மைக்குப் பாடுபடுவது, காரணம் இக்கட்சி தேர்தல் கட்சியல்ல. ஓட்டுக் கேட்கும் கட்சியல்ல. எனவே ஆங்காங்கு கழகம் இல்லாத ஊர்களில் கழகம் அமைக்க வேண்டும். எல்லாத் தமிழர்களும், தமிழர்களுக்குப் பிறந்த தமிழர்களும் தி.க.வில் உறுப்பினராக வேண்டும்.
இரண்டாவதாக விடுதலை பத்திரிகையை ஒவ்வொருவரும் அவசியம் வாங்கிப் படிக்க வேண்டும். மற்ற பார்ப்பன ஏடுகளை மறந்துகூட எவரும் வாங்கக் கூடாது. அவை நமக்கு துரோகம் இழைப்பவையாகும். தமிழர்களுக்காக, தமிழர்களின் கல்வி உத்தியோக நியமனத்துக்காகப் பாடுபடும் ஏடு விடுதலை ஒன்றுதான். எனவே விடுதலையை அனைவரும் ஆதரிக்க வேண்டும்.
மூன்றாவதாக குடியரசு, விடுதலை மற்றும் பகுத்தறிவு வெளியீடுகளாக பார்ப்பனப் பித்தலாட்டங்களை விளக்கும் நூல்களும் மற்றும் பல நூல்களும் மலிவு விலையில் விற்கப்படுகின்றன. அதனை வாங்கி யாவரும் படிப்பதோடு மற்றவர்களையும் படிக்கச் செய்ய வேண்டும்.
- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
(10.5.1958இல் லால்குடியில் நடைபெற்ற வட்ட ஜாதி ஒழிப்பு மாநாட்டில் ஆற்றிய உரையிலிருந்து)
- விடுதலை 18.5.1958

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...