Sunday, December 2, 2007

மகிழ்ச்சியான செய்தி தமிழர் தலைவர் பவள விழா நேரடி ஒளிபரப்பு!



தமிழர் தலைவரின் 75-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள் பெரியார் வலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப் பாக இருக்கிறது. 2.12.2007 அன்று காலை - மாலை நிகழச்சிகளை periyar.org.in வலைத்தளத்தில் நேரடியாகக் காணலாம். உலகத் தமிழர்களே! தமிழர் தலைவரின் விழா மாட்சியைக் காண இவ்வரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வீர்!

Saturday, December 1, 2007

பன்னாட்டு நிறுவனங்களில் ஜாதிப்பார்வை -




    சமூகநீதிக்குத் தலைநகரமான தமிழகம்-தான் இந்தியாவிற்கே இன்று வழிகாட்டி வருகிறது. எதையும் கொஞ்சம் முந்திச் சிந்திப்பது பெரியாரின் மரபு. கடந்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே, அதாவது இந்தியத் துணைக் கண்டத்தின் விடுதலைக்கு முன்பேயே சமூகநீதி குறித்து தமிழகம்தான் சிந்தித்தது. அரசியல் விடுதலையை விட, சமூக விடுதலையே அவசியம் என பெரியார் முழங்கினார். அன்றைய நாள் தொட்டு, திராவிட இயக்கம் நடத்திய போராட்டமே சமூகநீதியை உறுதி செய்து இட ஒதுக்கீடு முறையைத் தமிழகம் தக்க வைத்துக் கொண்டது.

      1985-களின்போது அரசுத் துறை நிறு-வனங்களைப் போலவே தனியார்த் துறையும் இந்தியா-வில் அதிக அளவு வளர்ச்சி பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகின. இந்திய அரசியல் சூழல் உலக மயமாதலுக்கு உறுதுணையாக அமைந்தது; அதன் விளைவாக தனியார்த் துறையில் பனியாக்களும், பன்னாட்டு நிறுவனங்களும் ஈடுபட்டு தொழில்களைக் கைப்பற்றி விடும் என முன்னேயே கணித்தது திராவிடர் கழகம். பெரியாரின் மரபில் அவரின் வீச்சோடு எதையும் தொலைநோக்கோடு சிந்திக்கும் ஆற்றல் வாய்ந்த தலைவர் கி. வீரமணி அவர்கள் தனியார், துறையிலும் இட ஒதுக்கீடு என்ற முழக்கத்தை முதன்முதலில் எழுப்பினார் 2.1.1982 இல் மதுரையில் நடைபெற்ற தி.க., மாநாட்டில்-தான் தனியார் துறையில் இட ஒதுக்கீடு குறித்த தீர்மானத்தை நிறைவேற்றினார்.

        இன்று இந்தியாவெங்கும் தனியார் துறைகள் பெரும் வளர்ச்சி பெற்றுள்ளன. தனியார்த் துறைகளில் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி சமூகநீதிக் கொள்கையில் உடன்பாடு கொண்ட அத்தனைக் கட்சிகளும் தி.க.,வின் அன்றைய தீர்மானத்தை இன்று வழிமொழிகின்றன. ஒரு பக்கம் உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை வலியுறுத்திப் போராட்டங்கள் தொடர்கின்றன. இந்நிலையில், அண்மையில் நடந்த ஒரு நிகழ்வு ஜாதியப் பார்வை இன்னும் உயர் ஜாதியினரிடம் இருந்து அகன்று விடவில்லை என்பதை உணர்த்தியுள்ளது. டெல்லியில் உள்ள மயூர் பாஞ்ச் பகுதியில் இந்தியாவின் புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவனம் ஒன்றிற்கு வேலைக்கான நேர்காணலுக்கு பித்யூத் என்பவர் சென்றுள்ளார். இவர் ஒரு தாழ்த்தப்பட்டவர். டில்லி ஜவகர்லால் நேரு பல்கலையில் கணிதம் பயின்றவர். அந்தப் பன்னாட்டு நிறுவனத்தில் பித்யூத்க்கு அமர்வதற்கு நாற்காலிகூட தரப்பட-வில்லையாம். நேர்காணல் செய்யப்படும்போது பித்யூத்தின் கல்வித் தகுதியைத் தவிர்த்து விட்டு, குடும்பப் பின்னணி (அதாவது ஜாதி) பொருளாதாரப் பின்புலம், பெற்றோரின் வேலை வாய்ப்பு ஆகியவைபற்றியே கேள்வி கேட்கப்பட்டதாம். கடைசியில் அந்நிறுவன இயக்குநர், மிகக் குறைந்த ஊதியத்தில் பிழைக்கும் குடும்பத்தில் பிறந்தவருக்கு வேலை தர முடியாது என மறுத்துவிட்டாராம். இந்த நிகழ்வு ஒரு உதாரணம்தான். பெரும்பாலான தனியார் நிறுவனங்களில் தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையினருக்கு இந்த நிலைதான் என்பதை ஒரு ஆய்வு அம்பலப்படுத்தியுள்ளது.

          நியூயார்க்கின் சிட்டி பல்கலைப் பேராசிரியர் பால் அட்டினுல் மற்றும் பிரின்ஸ்டன் பல்கலைப் பேராசிரியர் கேத்ரின் நியூமென் ஆகியோர் இந்த ஆய்வை மேற்கொண்டனர். இந்த ஆய்வுக்குத் தற்போதைய பல்கலைக் கழக மானியக் குழுவின் (யு.ஜி.சி.) தலைவர் சுக்தேவ் தோரட் ஒத்துழைப்புத் தந்துள்ளார். 2005 ஆம் ஆண்டிலிருந்து பல்வேறு நாளிதழ்களில் இருந்தது பன்னாட்டு வேலை வாய்ப்பு விளம்பரங்களைச் சேகரித்தனர். அதிலிருந்து ஒவ்வொரு பிரிவிலும் மூன்றுவிதமான மனுக்கள் மற்றும் கடிதங்களை இந்த ஆய்வில் ஈடுபட்ட-வர்கள் உருவாக்கினார்கள். அந்த மனுக்களில் எளிதில் பிரித்து அறிய முடியாத கல்வி மற்றும் இதர விவரங்களை இடம்பெறச் செய்தனர். ஜாதி மற்றும் மதப் பின்னணிபற்றி வெளிப்படையாகக் குறிப்பிடாமல் ஒவ்வொரு செட் மனுக்களிலும் - ஒன்று உயர்ஜாதி பெயர் கொண்டவராகவும், இன்னொன்று சிறுபான்மையினர் அல்லது தாழ்த்தப்பட்டவர் பெயர் கொண்டவராகவும் அமைக்கப்பட்டது. அதில் தொடர்பு முகவரியும் எழுதப்பட்டி-ருந்தது. இதுபோல மொத்தம் 4,808 விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டன. நேர்-காணலுக்-கான வாய்ப்பு எப்படி அமைந்தது என்பதில்தான் தனியார் நிறுவனங்களின் ஜாதிய மனப்பான்மை தெரிய வந்தது.

            உயர்ஜாதி மனுதாரரோடு ஒப்பிடும்போது அதே அளவு கல்வித் தகுதி உடைய தாழ்த்தப்-பட்ட மாணவருக்கான நேர்காணல் வாய்ப்பு 66 சதவிகிதமாக மட்டுமே கிடைத்தது. இஸ்லாமிய மனுதாரரைப் பொறுத்தவரை இந்த வாய்ப்பு 33 சதவிகிதமாகக் குறைந்து-விட்டது. தகுதிக் வாய்ந்த தாழ்த்தப்பட்ட மாணவரைவிட தகுதி குறைவான உயர்ஜாதி மாணவருக்கு 20 சதவிகித அளவில் அதிக வாய்ப்பு கிடைத்தது. சமூகப் பொறுப்-புணர்ச்சிபற்றிப் பேசும் பல நிறுவனங்களும் இதில் அடக்கம் என்று அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

              இந்த ஆய்வு குறித்துப் பேசிய சுக்தேவ் தோரட், வணிக நிறுவனங்கள் சமூகப் பின்னணியின் அடிப்படையில் பாகுபாடு காட்டுகின்றனர் என்பதற்கான ஆதாரம் முதல் முறையாகக் கிடைத்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு உறுதியான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று கூறினார்.

                பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பிக்கும் இந்து மத இழிகுணம் எந்த வகையிலும் அதன் பார்வையைக் கைவிடவில்லை. ஒரு வேலைக்-கோ, தொழிலுக்கோ அதற்குத் தேவையான அறிவும் உழைப்புக்கான தகுதி மட்டுமே போதுமானது. ஆனால், இந்தியாவில் இதையும் தாண்டி ஜாதித் தகுதி என்ற மோசமான பார்வை இன்னும் இருக்கிறது என்பதையே இந்த ஆய்வு நமக்கு உணர்த்துகிறது. சமூகச் சமநிலையைக் கொண்டு வர அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் மட்டுமல்லாது தனியார்த் துறைகளிலும் இட ஒதுக்கீட்டை கட்டாயமாக்கவேண்டிய சூழல் அதிகரித்து வருகிறது. அரசுத் துறை, நீதித்துறை, தனியார் துறைகள், பன்னாட்டு நிறுவனங்கள் என எல்லா நிலையங்களிலும் சமூகநீதியை வலியுறுத்திப் போராடுவதன்மூலமே சமுதாயத்தில் சம நிலையை உருவாக்க முடியும்.
                1. (நன்றி: தி சண்டே இந்தியன் (நவ.18, 2007)).

                குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

                மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...