தமிழர் தலைவரின் 75-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள் பெரியார் வலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப் பாக இருக்கிறது. 2.12.2007 அன்று காலை - மாலை நிகழச்சிகளை periyar.org.in வலைத்தளத்தில் நேரடியாகக் காணலாம். உலகத் தமிழர்களே! தமிழர் தலைவரின் விழா மாட்சியைக் காண இவ்வரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வீர்!
Sunday, December 2, 2007
மகிழ்ச்சியான செய்தி தமிழர் தலைவர் பவள விழா நேரடி ஒளிபரப்பு!
தமிழர் தலைவரின் 75-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள் பெரியார் வலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப் பாக இருக்கிறது. 2.12.2007 அன்று காலை - மாலை நிகழச்சிகளை periyar.org.in வலைத்தளத்தில் நேரடியாகக் காணலாம். உலகத் தமிழர்களே! தமிழர் தலைவரின் விழா மாட்சியைக் காண இவ்வரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வீர்!
Saturday, December 1, 2007
பன்னாட்டு நிறுவனங்களில் ஜாதிப்பார்வை -
- (நன்றி: தி சண்டே இந்தியன் (நவ.18, 2007)).
Tuesday, November 20, 2007
பா.ஜ.க., ஆசையில் விழுந்த மண்!
நன்றி: விடுதலை தலையங்கம் 20.11.2007
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது!
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமல் 7 நாளில் பதவி விலகல்
பெங்களுர், நவ.20-
கர்நாடக மாநிலத்தில் அமைந்த எடியூ ரப்பா தலைமையிலான பா.ஜ.க. அரசு 7 நாள்களில் நம்பிக்கை வாக்கெடுப்புகூட நடத்தாமல் கவிழ்ந்தது.எடியூரப்பா அரசு அமைக்க முதலில் ஆதரவளித்த மதச் சார்பற்ற ஜனதா தளம் தனது முடிவை மாற்றிக் கொண்ட தால் சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக் கும் முன்னதாகவே எடியூரப்பா அரசு பதவி விலகியது.இம்மாதம் 12 ஆம் தேதி பதவியேற்ற எடியூரப்பா 20 ஆம் தேதிக்குள் தனது பெரும் பான்மையை மெய்ப்பிக்க வேண்டுமென்று ஆளுநர் ராமேஷ்வர் தாக்கூர் காலகெடு விதித்தார். அதற்கு ஒரு நாள் முன்னதாக 19 ஆம் தேதியே நம்பிக்கை வாக்கெடுப்பு கோரப் போவதாக எடியூரப்பா அறி வித்திருந்தார்.நேற்று மதச்சார்பற்ற ஜனதா தள சட்டமன்ற உறுப்பினர் கூட்டம் நடந்தது. குமாரசாமி முதல்வராக இருந்தபோது அவர் மீது கொலைப் பழி சுமத்திய சிறீராமுலுவுக்கு அமைச்சர் பதவி தரக்கூடாது என்ற கோரிக்கையை பா.ஜ.க. ஏற்க மறுத்ததால், எடியூரப்பா அரசை எதிர்த்து வாக்களிப் பது என முடிவு செய்யப்பட் டது.பரபரப்பான இந்தப் பின் னணியில் நேற்று காலை 11 மணிக்கு சட்டப்பேரவை கூடி யது. முன்னாள் உறுப்பினர் களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஒத்தி வைக்கப் பட்டு பிற்பகல் 3 மணிக்கு மறுபடியும் அவை தொடங் கியது. முதல்வர் எடியூரப்பா தனது அரசுமீதான நம்பிக்கைத் தீர்மானத்தைக் கொண்டு வந்த பேசினார். அதன் பின் அதன் மிது விவாதம் நடைபெற்றது.நம்பிக்கை வாக்கெடுப்பில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் ஆதரவு கிடைக்காது என்பது உறுதியான நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்வ தாகத் தெரிவித்து விட்டு, ஆளுநர் மாளிகைக்குச் சென்ற அவர் தனது அமைச்சரவையின் ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அளித்தார்.
Friday, November 16, 2007
பாசிச கொடூர சக்திகளிடமிருந்து ஈழ மக்களைக் காப்பாற்றும் ஒரே அமைப்பு விடுதலைப்புலிகளே! - கி.வீரமணி
அதற்காக காங்கிரசார் இரத்தக் கண்ணீர் வடிக்கவேண்டுமா?
ராஜீவ் படுகொலையையும், இதனையும் குழப்பிக் கொள்ளலாமா?
உரிமையுடன் காங்கிரசாருக்குச் சுட்டிக்காட்டுகிறோம்
விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் சுப. தமிழ்ச் செல்வன் மறைவிற்கு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் கண்ணீர் இரங்கல் தெரிவித்ததற்காக ரத்தக் கண்ணீர் வடிப்பதாக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
ஈழத் தமிழர்களை அழித்துவரும் ராஜபக்சே அரசு ராஜீவ் காந்தி - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தில் இடம்பெற்ற சில குறைந்தபட்ச சலுகைகளைக்கூட காலில் போட்டு மிதித்துவிட்டது என்பதும் உலகம் அறிந்த உண்மையல்லவா!
கலைஞர் அவர்கள் ஆண்ட போது இப்படி ஒரு படுகொலை நிகழ வில்லை; மாறாக மத்தியில் உள்ள ஆட்சி - காங்கிரஸ் ஆதரவுடன் நடந்த ஓர் ஆட்சி - குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்தபோதுதான் நிகழ்ந்தது என்றாலும், செய்யாத குற்றத்திற்கு ஜென்ம தண்டனை என்பதுபோல எத்தனையோ சொல்லொணாக் கொடுமைகளை தி.மு.க.,வும், அதன் தோழமையினரும் அன்று அனுபவித்தனர்.
அவைகளையெல்லாம் தாண்டி சில மாதங்களுக்குமுன் நடைபெற்ற தமிழக சட்டமன்ற நிகழ்வுகளின்போது, இப்பிரச்சினை குறித்து மிகத் தெளிவாக முதல்வர் கலைஞர் அவர்கள் விளக்கி, நடந்த சம்பவங்களைக் கண்டித்துவிட்டு, அதற்காக ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை நாம் அலட்சியப்படுத்திவிடக் கூடாது என்பதை உள்ளடக்கமாகக் கொண்டு, தோழமைக் கட்சியினரின் ஒத்துழைப்போடு ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்றியுள்ளது நினைவூட்டப்பட வேண்டியதாகும்.
அன்று ராஜீவ் காந்தியோடு சந்திப்புஅம்பேத்கர் நூற்றாண்டு விழா குழு (1989 இல் மத்தியில் வி.பி. சிங் பிரதமராகவும், ராஜீவ் காந்தி எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தபோது)வில் ஓர் உறுப்பினர் என்ற முறையில் டில்லி பார்லி மெண்ட் அனெக்ஸ் கட்டடத்தில் நடந்த கூட்டத்தில் மதிய உணவுக் காகக் கலைந்து, உணவு பரிமாறும்போது, பலருடனும் ராஜீவ் காந்தி அவர்கள் சகஜமாகப் பேசி வந்தவர்; திடீரென என்னைப் பெயர் சொல்லி அழைத்து, அருகில் அழைத்து, தனியே பேசினார்.
இலங் கையில் இனப்படுகொலை நடப்பது மிகவும் கொடுமை; இதை நாம் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது. அங்கே தீவாயு (நாப்பாம்) குண்டு வீசுகிறார்கள் என்ற செய்தி வந்துள்ளது என்று கூறினார்.
முதலமைச்சர் கலைஞரிடம் கூறினேன்
ராஜீவ் அவர்களே, நீங்கள் தங்கள் தாயார் இந்திரா காந்தி அவர்கள் கடைசியாக தஞ்சாவூருக்கு வந்தபோதே இதே சொல்லை (ழுநடிஉனைந) பயன்படுத்தினார்; இப்போது நீங்களும் அதையே சொல்வது தங்களுக்குள்ள மனிதாபிமானத்தினைக் காட்டுகிறது என்று நான் சொன்னவுடன், தமிழ்நாடு முதல்வர் கலைஞரிடம் சொல்லுங்கள் என்றே சொன்னார். அதன்படி நான் சென்னை வந்து முதல்வரிடம் (கலைஞரிடம்) ராஜீவ் காந்தி அவர்கள் சொன்னதைக் கூறியதோடு, அவர்தம் பதில் பற்றி தன்னிடமோ அல்லது குறிப்பிட்ட சில அதிகாரிகளிடமோ கூறச் செய்யுங்கள் என்று ராஜீவ் காந்தி சொன்னதையும், முதலமைச்சரிடம் எடுத்துக் கூறினேன்.
அப்படிப்பட்டவர் கொல்லப்பட்டது மிகக் கொடுமை - ஏற்கவே இயலாது!என்னை அவர் தனியே அழைத்துப் பேசியவுடன் சற்று தூரத்திலிருந்து பார்த்தவர் இந்து ஆசிரியர் என். ராம் அவர்கள். அதற்குப்பின் எவ்வளவோ நடந்துவிட்டன! இரண்டையும் ஒன்றாகப் பார்க்கக் கூடாது! ராஜீவ் கொலையையும், இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் 20 ஆண்டுகளாக நொடிதொறும் அனுபவிக்கும் வாழ்க்கைத் துயரத் தையும் ஒன்றாகவே காங்கிரஸ் கட்சியினர் பார்த்தால் அது சரியாக இருக்குமா?
நிதியமைச்சர் ப. சிதம்பரம்கூறியதுகூடக் குற்றம்தானா?
அண்மையில் இலங்கைக்குச் சென்று உரையாற்றிய, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய, நிதியமைச்சர் ப. சிதம்பரம் அவர்கள், இராணுவ நடவடிக்கையால் ஈழத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது; அரசியல் தீர்வுதான் வழி; விடுதலைப்புலி களுடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள் என்று ராஜேபக்சே அரசுக்கு அறிவுரை கூறிவிட்டு வந்துள்ளாரே, அதுகுறித்து தடை செய்யப் பட்ட விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசியல் சட்டத்தின் மீது பிரமாணம் எடுத்தவர் பேசலாமா என்று கேட்டால், நியாயமா?அனுதாபம் தெரிவித்ததைவிட சற்றுக் கூடுதலான நடவடிக்கை அல்லவா, இது!
முதல்வர் தெரிவித்தநல்லெண்ணக் கண்ணீர் அஞ்சலி
நல்லெண்ணத்தோடு அவர்கள் சொன்னதைப்போலவே, எவ்வித உள்நோக்கமும் இன்றி கண்ணீர் அஞ்சலியை கலைஞர் விடுத்தால், அதைக் கண்டு ரத்தக் கண்ணீர் சிந்துகிறோம் என்று சொல்லி, இந்த ஆட்சியை வீழ்த்தவேண்டும், பலவீனப்படுத்தவேண் டும் என்று நினைக்கும் மதவெறி மற்றும் பார்ப்பனீய சக்திகளுக்கு அறிந்தோ, அறியாமலோ, தோழமைக்கட்சியினர் துணை போகலாமா?
ஒரு மரணத்துக்காகக் கண்ணீர் வடிக்கக் கூடாது; ஆனந்தக் கண்ணீர் உகுக்கவேண்டும் என்ற எண்ணத்தை காங்கிரசார் உருவாக்கலாமா? இந்நிலை அக்கட்சிக்குப் பெருமை சேர்க்காதே!
திரு. வீரப்பமொய்லி அவர்களிடம் கேட்கப்பட்டபோதுகூட, அவர்கள் அவர்களது தனிப்பட்ட உணர்வு என்று சொன்னதையும் சுட்டிக்காட்ட நாம் விழைகிறோம்.தேசத் தந்தை என்று போற்றப்பட்ட காந்தியார் அவர்களையே படுகொலை செய்த கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தனரே - அவர்களைப் பார்ப்பதே பாவம் என்றா கண்களை மூடிக்கொண்டு விட்டனர்? அரசியலில் தேவைப்படும் போது, கைகுலுக்கிக் கொண்டது இல்லையா? நாகரிகம் கருதி பல சந்தர்ப்பங்களில் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்வதில்லையா?
பிரதமர் இந்திரா காந்தியைக் கொன்றவர்கள் என்று கூறி ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தையே தீண்டத்தகாத பட்டியலில் வைக்க வில்லையே! தடை செய்யப்பட்ட காஷ்மீர், வடகிழக்கு மாகாண தீவிரவாத அமைப்புகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்துவது இல்லையா?ராஜீவ் படுகொலையில் தண்டிக்கப்பட்டு சிறையில் வாழும் ஒரு பெண்மணி (நளினி) விஷயத்தில் காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்கள் எப்படி நடந்துகொண்டார் என்பதைப் பெருமை மிக்க எடுத்துக்காட்டாகக் காங்கிரசார் கொள்ள வேண்டாமா? வெறும் வாய்க்கு அவலா?அவரவர்கள் கருத்துகளை வெளியிட அவரவர்களுக்கு உரிமை உண்டு என்றாலும்,அரசியல் எதிரிகளுக்கும், கலைஞரைத் தனிப்பட்ட முறையில் எதிர்ப்போருக்கும் வெறும் வாயை மென்றவர்களுக்கு இந்த அவலை மெல்லுங்கள் என்று தருவதால், என்ன லாபம்? மத்தியில் உள்ள ஆட்சிக்கு மூலக்கல்லாக இருக்கும் தி.மு.க., ஆட்சியை அசைத்துப் பார்த்தால் யாருக்கு நட்டம் - யோசிக்க வேண்டாமா?மனிதநேயர்கள், அரசியலுக்கு அப்பாற்பட்ட மனிதநேயர்கள் மத்தியில் இது எவ்வகையான சிந்தனைகளை எழுப்பும் என்பதை யும் அருள்கூர்ந்து காங்கிரஸ் கட்சி நண்பர்கள் சிந்திக்கவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
உரிமையுடன் சுட்டிக்காட்டுகிறோம்உங்களுக்கென்ன (தி.க.) உரிமை என்று யாரும் கேட்க மாட்டார்கள் என்று நம்புகிறோம்; காரணம், 1954 முதல் 1967 வரை அதை ஆதரித்ததோடு, 2004-லும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு மகத்தான ஆதரவினையும், 2006 சட்டமன்றத் தேர்தலில் அதனை ஆதரித்தோடு, இன்னமும் ஆதரிப்பவர்கள் என்ற உரிமையுடனும் சுட்டிக்காட்டுகிறோம்.
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.
சென்னை
15.11.2007
Tuesday, September 25, 2007
ராம்விலாஸ் வேதாந்தியைக் கைது செய்க! - திராவிடர் கழகம் புகார் மனு
சென்னை காவல்துறை ஆணையரிடம் திராவிடர் கழகம் புகார்மனு
Saturday, September 22, 2007
இராமாயணத்தைப் பற்றிய அறிஞர்கள் கருத்து -2
ஆரியர்களின் ஒழுக்க ஈனமான காரியங்களில் எல்லாம் சிறந்த காரியங்கள் மதுவருந்துவதும் சூதாடுவதுமாகும். ரிக் வேதத்தில் இதற்கு ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன.
இந்திய அய்ரோப்பியர்களால், அதாவது, ஆரியர்களால் தோற்கடிக்கப்பட்ட கறுப்பு மனிதர்கள் (திராவிடர்களை) தஸ்யூக்கள் என்றும் கொள்ளைக்காரர்கள் என்றும், அடிக்கடி பிசாசுகளாக மாறக் கூடியவர்கள் என்றும் வேத இலக்கியங்களில் கூறப் பட்டிருக்கிறது.
மேற்கு திபெத்தையும், ஆஃப்கானிஸ்தானத்தையும் தாண்டி, முதன் முதல் இந்தியாவுக்குள் வந்த ஆரியர்கள், சமஸ்கிருதத்தைப் போன்ற ஒரு பாஷையைப் பேசினார்கள். இந்தியாவிற்குள் ஆதியில் நுழைந்த இவ் வெள்ளையர்கள் மக்கள் கொள்கைகள், பழக்க வழக்கங்கள், கவிதைகள், மத நம்பிக்கைகள் முதலியவைகளை அப்பாஷையிலேயே எழுதி வைத்துக் கொண்டார்கள்.
இராமாயணமும், மகாபாரதமும் இந்தோ-ஆரியர் காலத்தையும், அவர்களுடைய வெற்றிகளையும், உள்நாட்டுச் சண்டைகளையும் பற்றிக் கூறுவதாகும் . . . இவைகள் உண்மையென்று நான் நம்பியதேயில்லை. பஞ்சதந்திரம், அராபியன் நைட் முதலிய கற்பனைக் கதைகளைப் போன்றவை என்பதே என் கருத்து.
இராமாயணம் என்பது தென்னிந்தியாவில் ஆரியர் பரவியதைக் குறிப்பதாகும்.
ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்ததனால் புதிய பிரச்சினைகள் கிளம்பின. இனத்தாலும், அரசியலாலும், மாறுபாட்ட திராவிடர்கள், ஆரியரால் தோற்கடிக்கப்பட்ட திராவிடர்கள் நீண்ட கால நாகரிகத்துடன் வாழ்ந்து வந்தபடியால், இவர்களை விடத் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று கூறிக் கொண்ட ஆரியர்களுக்கும் இவர்களுக்கும் இடையே விரிந்த - பெரிய - பிளவு ஏற்பட்டது.
இராமாயணம் ஒரு கட்டுக்கதைதான். வால்மீகியின் கற்பனையின் விளைவாகவே இராமாயணம் உண்டாயிற்று.
ஆரியரின் இத்தகைய வெறியாட்டு வேள்விகளை அழித்து வந்த சூரன் - இராவணன் முதலான நிகரற்ற தமிழ் வேந்தர்களே, ஆரியர்களால் அரக்கர் என்று இகழ்ந்து பேசப்படுவாராயினர்.
ஆரியர் வாய்ந்த பார்ப்பனர்கள், கடவுள் அதோ, அவருக்கு நேரே வந்து அருள்புரிந்தார்; இதோ, இவருக்கு நேராக அருள்புரிந்தார் என்று பொய்யான புராணக் கதைகள் பலவற்றைக் கட்டி விட்டனர்.
இராவணன் தேவர்களையும், ரிஷிகளையும் தொல்லைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அசரர் - தேவர் என்ற சொற்கள் இரண்டு விதமான இனத்தாரை - நாட்டாரை குறிப்பிடுவதாகும். ஆரியர்கள் தங்கள் இனத்தை தேவர்கள் என்றும், தங்கள் எதிரிகளை அசுரர்கள் - அரக்கர்கள் என்றும் வர்ணித்தார்கள்.
மத நம்பிக்கை ஒருபுறமிருக்க, இராமாயணக் கதையானது உவமையுரையோ சரித்திரமோ அல்ல; கட்டுக் கதையை அடிப்படையாகக் கொண்ட கவிதையே தான்.
மகாபாரதத்தில் இருப்பது போலவே, இராமாயணத்திலும் கதாபாத்திரங்கள் யாவும் கற்பனைகளே. இரண்டிலும் சரித்திர சம்பந்தமானது ஒன்றுமேயில்லை.
Thursday, September 20, 2007
இராமாயணம் உண்மைக் கதையா?
(முன்பு கல்வி அமைச்சராக இருந்த கனம் சி.ஜே. வர்க்கி எம்.ஏ., எழுதிய
(இம்பீரியல் இந்தியன் கெஜட் 1909 ஆம் வருடத்திய பதிப்பு வால்யூம் 1 இல்
Thursday, September 6, 2007
பாரீசிலும் பகுத்தறிவுக் கொள்கை
Monday, August 20, 2007
2007-லும் கோயில் நுழைவுக்காகப் போராடும் நிலையா?
விடுதலை தலையங்கம்(17.08.207)
மாட்டு மூத்திரம் வாங்கலியோ, மாட்டு மூத்திரம்
மாட்டு மூத்திரம் என்றால் அதுவும் பசுமாட்டு மூத்திரம் மட்டும்தான் - எருமை மாட்டு மூத்திரமோ, காளை மாட்டு மூத்திரமோ அல்ல! பசுதானே அவர்களின் கோமாதா! ஏற்கெனவே பசுவை உணவுக் காக வெட்டக் கூடாது என்று ஒரு சட்டத்தையும், அந்த மாநிலத்தில் பிறப்பித்து நடைமுறைப்படுத்தி விட்டனர். மீறி வெட்டினால் சிறைத் தண்டனையோடு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் வேறு கட்டவேண்டும்.மாட்டு மூத்திரத்தை எடுத்து இரசாயன பரிசோதனை செய்து பார்த்தார்களா என்று தெரியவில்லை. அது ஒரு கழிவுப் பொருள்தான். கழிவுப் பொருளைச் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என்று இதுவரை எந்த மருத்துவத் துறை விஞ்ஞானமும் தெரிவிக்கவில்லை.பஞ்சகவ்யம் என்று சொல்லி மாட்டு மூத்திரம், சாணி, பால், தயிர், வெண்ணெய் அய்ந்தையும் ஒன்றாகக் கலக்கி, `சூத்திரன் வீட்டில் நடக்கும் திதி முதலிய காரியங்களில், வீட்டுப் பெரியவர்களைக் குடிக்கச் செய்வார்கள். அதற்குத் தட்சணையும் கொடுத்து பயபக்தியோடு குடிப்பார்கள் சூத்திரர்கள்.இதனை திருமண நிகழ்ச்சிகளிலும், புதுமனை புகுவிழா நிகழ்ச்சிகளிலும், நீத்தார் நினைவு போற்றும் நிகழ்ச்சிகளிலும் தந்தை பெரியார் எடுத்துக்காட்டி மானங்கெடப் பேசுவார்கள்.பஞ்சகவ்யத்தை முகம் சுளிக்காமல் குடிக்கிறானா என்று பார்ப்பான் பார்ப்பானாம். அப்படி முகம் சுளிக்காமல் குடித்தால் பார்ப்பான் கணக்குப் போடுவானாம்! `பரவாயில்லை இன்னும் நூறு வருஷங்களுக்கு இவாளைச் சுரண்டலாம்! என்று கணக்குப் போடுவானாம் - தந்தை பெரியார் கூறுவார்.இன்னும் ஓர் அளவுகோலையும் தந்தை பெரியார் கூறுவதுண்டு.பஞ்சகவ்யம் குடிப்பது என்பது நமது முட்டாள்தனத்தைப் பார்ப்பான் அளக்கும் தர்மா மீட்டர் என்றும் சொல்லுவார்.தமிழ்நாட்டில் தந்தை பெரியார் தோன்றினார்; பிரச்சாரம் செய்தார். திராவிடர் கழகம் இருக்கிறது; தொடர் பிரச்சாரம் நடந்துகொண்டு இருக்கிறது. இத்தகு காரணங்களால் இந்தப் பஞ்சகவ்யம் எல்லாம் அனேகமாகக் குறைந்து போய்விட்டது.அதேநேரத்தில், பா.ஜ.க., - சங் பரிவார்க் கும்பல் பசுமாட்டு மூத்திரத்துக்கு ஒரு மகத்துவத்தை உண்டாக்கும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறது என்பதை நம் மக்கள் தெரிந்துகொள்ளுவது நல்லது.தன் மலத்தையே தின்ன பரமஹம்சர்கள் எல்லாம் கூட இந்த நாட்டில் உண்டு.கேட்டால் அவர்கள் `மும்மலத்தையும் அறுத்த மலந்தின்னிகள் என்று பட்டம் கொடுத்தாலும் கொடுப்பார்கள்.வெட்கக்கேடு. இந்த 2007-லும் இப்படி ஒரு கூட்டம்!இந்துத்துவா என்றால், ஓகோ என்று பேசுகிறார்களே - ஒரு வெங் காயமும் இல்லை - மாட்டு மூத்திரத்தைக் குடிக்கச் சொல்லுவதுதான் - ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போதாதா?
Tuesday, August 14, 2007
வகுப்பு வாரி உரிமை நாள்! - தமிழர் தலைவர் அறிக்கை
இன்று ஆகஸ்ட் 14!
இண்டர் மீடியட் 33.8 சதவிகிதம்
பி.ஏ.; பி.காம் 33.6 சதவிகிதம்;
பி.எஸ்ஸி., 46.6 சதவிகிதம்;
பி.ஏ. ஆனர்ஸ் 48.5 சதவிகிதம்
சென்னை
14.8.2007
Tuesday, July 17, 2007
சோதனைப் பதிவு
கடவுள் இல்லை!!
கடவுள் இல்லவே இல்லை!!
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்!
கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன்!
கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி!
தர்மகர்த்தா அணுகுமுறைவேண்டாம்! - தலையங்கம்
(பெரியார் 85 ஆவது பிறந்த நாள் மலர், பக்கம் 92)
தமிழக தமிழ் நாளேடுகளில் முதல்முறையாக...
Thursday, March 22, 2007
தமிழ்நாடு பொதுப் பணித்துறை அமைச்சர் துரை முருகன் குமரி மாவட்டம் ஆதிகேசவப்பெருமாள் கோயிலுக்கு கட்சிக்கரை வேட்டியை மாற்றிக் கொண்டு மேலாடையின்றி சென்றது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
கேரளா ஆகம விதிமுறைகள் இங்கு கண்டிப்பாக அமல்படுத் தப்படுவதால் மேல்சட்டை அணிந்து உள் பிரகாரத்தினுள் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை. எனவே அமைச்சரை கோயில் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்ற அதிகாரிகள் அவருக்கு ஜரிகை போட்ட பட்டு வேஷ்டி மற்றும் மேலே போர்த்திக் கொள்ள மெல்லிய அங்கவஸ்திரம் ஆகியவற்றை வழங்கினர். அமைச்சரும் பவ்யமாக அவற்றை வாங்கிக் கொண்டு கட்சிக் கரை போட்ட வேஷ்டிக்கும் தனது சட்டைக்கும் விடை கொடுத்தார். சந்தன மாலை மரியாதைகளையெல்லாம் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட அமைச்சர் அடுத்து கோயில் உள் பிரகாரத்தினுள் செல்ல ஆயத்தமானார்.உடனே பூஜைக்கான பழங்கள் உள்ளிட்ட பொருள்கள் ஒரு தாம்பாளத்தில் கொண்டு வரப்பட்டன. உதவியாளர் ஒருவர் அதனை ஏந்திக் கொண்டுவர அமைச்சர் உள்ளே போனார்.கோயிலில் பூஜை செய்யும் நம்பூதிரி முதலில் அமைச்சரின் பெயரைக் கேட்டிருக்கிறார். அமைச்சர் தனது பெயரைச் சொன்னதும் நட்சத்திரத்தைக் கேட்டாராம் நம்பூதிரி. சற்று நிதானித்து `கார்த்திகை என்று சொன்னாராம் அமைச்சர். பின்னர் அமைச்சரின் பெயரில் சிறப்புப் பூஜை நடந்திருக்கிறது. பூஜை முடிந்ததும் நம்பூதிரி கொண்டு வந்த பழங்கள் உள்ளிட்ட பிரசாதங்களைத் தொட்டு ஆசீர்வாதம் பெற்றுக்கொண்ட அமைச்சர் சந்தனத்தை எடுத்துத் தனது மார்பில் லேசாகத் தேய்த்துக் கொண்டாராம்.அதன் பிறகு அங்கவஸ்திரம் சகிதமாகவே கோயிலை வலம் வந்து அங்குள்ள சிற்பங்களை வெகுவாக ரசித்தார் அமைச்சர். உத்தேசமாக முக்கால் மணிநேரம் அங்கு செலவழித்த அமைச்சர் பின்னர் கரைவேஷ்டி - சட்டைக்கு மாறி நாகர்கோயிலுக்குப் பயணமானார்.மாணவப் பருவம் தொட்டு திராவிட இயக்கத்தில் ஊறியவரான துரைமுருகன் இந்த அளவுக்கு பக்தி மானாக மாறிப் போனதை தங்களாலேயே நம்ப முடியவில்லை என் கிறார்கள் உடன்பிறப்புகள். அதே சமயம் தி.மு.க.வின் மேல்மட்டப் பிரமுகர் ஒருவர் நம்மிடம் கூறுகையில் ``மிக மோசமான உடல்நலப் பாதிப்பு இருதய அறுவை சிகிச்சை ஆகிய பிரச்சினைகளுக்குப் பிறகுதான் அமைச்சரின் போக்கில் இந்த மாற்றம் என்றார் என்று `குமுதம் ரிப்போர்ட்டர் எழுதுகிறது!
கேசவப் பெருமாளோ அல்லது பட்டுத் துண்டு பட்டு வேட்டியோ அல்ல. வேலிகள் பயிரை மேய்ந்தால் நாம் வன்மையாகக் கண்டிப்பது நம்முடைய கடமையாகிறது!இந்த அரசின் சாதனைகளைப் பாராட்ட வேண்டியவற்றை பாராட்டும் அதே நேரத்தில் கண்டித்து உரிமையுடன் சுட்டிக் காட்டவேண்டியவற்றை உடனடியாகச் சுட்டிக்காட்ட திராவிடர் கழகம் ஒருபோதும் தயங்காது!
குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது
மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...
-
(கழக பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் 24.12.2011 அன்று வானொலியில் ஆற்றிய உரை) நான் எழுத்தாளன் அல்லன்; பேச்சாளன் அல்லன்; கருத்தாளன் என்று தந...
-
கொள்கைகள், லட்சியங்களைக் கொண்ட எந்த ஓர் இயக்கமும் வரலாற்றில் பல்வேறு கட்டங்களைக் கடந்துதான் வெற்றி வாகை சூடிட முடியும். அதிலும் மிகவும் கடி...
-
ஈரோடு போவதற்கு துணிவு - தெளிவு - கொள்கை தேவை அதற்கு எடுத்துக்காட்டானவர் கவிஞர் ஈரோடு தமிழன்பன் கவிஞர் ஈரோடு தமிழன்பன் பிறந்த நாள் விழா -...